உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஏமாற்றமா?

1

Posted on : Tuesday, August 13, 2013 | By : ஜெயராஜன் | In :

ஏதாவது ஒரு விசயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டீர்களா?அதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யுங்கள்.நாளானால் அதுவே உங்கள் மூளையை ஒரு அமிலம் போல அரிக்க ஆரம்பித்துவிடும்.ஏமாற்றத்திலிருந்து விடுபட சில யோசனைகள்:
1.முதலில் பதட்டப்படாமல் சற்று அமைதி ஆகுங்கள்.உங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்துக் கொள்ளுங்கள்.இதே பிரச்சினை நாளைக்கு சாதாரணமானதாகத் தெரியலாம்.
2.உங்களுக்கோ பிறருக்கோ எந்த பாதிப்பும் இல்லாமல் உங்கள் ஏமாற்ற உணர்வுக்கு வடிகால் கொடுங்கள்.
3.உங்கள் பெற்றோரிடமோ,மனைவியிடமோ,நண்பர்களிடமோ இது பற்றி மனம் விட்டுப் பேசுங்கள்.
4.கோபப்படுவதற்கோ,வருத்தப்படுவதற்கோ உரியதுதானா இப்பிரச்சினை என்று கொஞ்சம் யோசியுங்கள்.
5.இந்தப் பிரச்சினையிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டு அடுத்து இதைவிட சிறப்பாக எப்படி செயல்பட முடியும் என்று பாருங்கள்.
6.ஒரு தோல்வி உங்களை ஒரு உதவாக்கரை ஆக்கிவிட முடியாது.உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.
7.ஏமாற்றத்தைத் தவிர்க்க நன்கு திட்டமிடுங்கள்.அதில் மிக உறுதியாக இருக்க வேண்டாம்.திட்டங்கள் தேவைக்கேற்ற மாறுதல்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
8.ஏமாற்றம் கண்டு மனம் தளர்ந்து விடாதீர்கள்.இந்த சூழ்நிலையில் இந்தக் காரியத்தை நான் சிறப்பாக செய்கிறேனா என்பதை மட்டும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
9.நாளை நமதே என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.கெட்டிக்காரத்தனம் என்பது இயற்கையாய் வருவதல்ல.நாம் வளர்த்துக் கொள்வதுதான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

நாளை நமதே என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.கெட்டிக்காரத்தனம் என்பது இயற்கையாய் வருவதல்ல.நாம் வளர்த்துக் கொள்வதுதான்.

தென்றலாய் வருடும் இதமான மொழிகள்..பாராட்டுக்கள்..!

Post a Comment