உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள்-44

0

Posted on : Monday, August 12, 2013 | By : ஜெயராஜன் | In :

சத்தம் அதிகம் உள்ள இடத்தில்
சட்டம் அமைதியாகிவிடும்.
******
ஒரு கையைப் பிடிப்பதற்காக மூளையைத் தொலைக்கும் செயலே காதல்.
******
மக்களிடம் எதையும் ரகசியமாய்ச் சொன்னால்  நம்புவார்கள்.
******
முடியுமா என்பது முட்டாள்தனம்:
முடியாது என்பது மூடத்தனம்.
முடியும் என்பதே மூலதனம்.
******
வீழ்வது வெட்கத்திற்குரிய விசயமில்லை.
வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்.
******
எவன் மனிதர்களை அடக்கி ஆள்கின்றானோ
அவன் குழப்பத்தில் வாழ்கின்றான்.
எவன் மற்றவர்களால் அடக்கி ஆளப்படுகின்றானோ
அவன் துன்பத்தில் வாழ்கின்றான்.
******
திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது.-அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது-நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்வது-எச்சரிக்கையுடன் இருங்கள்.
******
ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்விக்கு உற்சாகம் குறையாமல் செல்வதே வெற்றி.
******
யாராவது ஒரு வேலையை உங்களால் செய்ய முடியுமா என்று கேட்டால்  முடியும் என்று சொல்லிவிட்டு அதை எப்படி செய்வது என்பதை யோசியுங்கள்.
******
மனிதன்குறையுடையவன்மட்டுமல்ல.குறைகாண்பவனும்ஆவான்.
பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்.தன் குறையைக் காண்பவன் முழு மனிதன்.
******
என் மகன் ஒரு தவறு செய்தால் அவனுக்காகப் பரிந்து பேச மாட்டேன்.
அப்படிப் பேசி நான் வெற்றி பெற்றுவிட்டால் பின்னால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment