உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிப்பா இது?

0

Posted on : Wednesday, May 30, 2012 | By : ஜெயராஜன் | In :

''தினமும் என் புருஷன் குடிச்சிட்டு வராருடி.''
'அவரை ஏன் விட்டு வைக்கிறே?கேட்க வேண்டியதுதானே?'
''சீ,சீ!எனக்குக் குடிக்கிற பழக்கம் எல்லாம் கிடையாது.''
**********
''ஒரு பக்க மூக்கிலே மட்டும் பொடி போடுகிறீர்களே?ஏன்?''
'மூக்குப் பொடி போடுறதை பாதியாக் குறைச்சிக்கச் சொல்லி
டாக்டர் சொன்னார்.அதுதான்.'
**********
''அந்தக் காலத்திலேயே நானும் என் மனைவியும் நாடோடி
மன்னன் படம் பார்த்துவிட்டு வந்தபின் தான் எனக்கு இரட்டைக்
குழந்தைகள்  பிறந்தார்கள்.''
'நல்ல வேளை! நீங்கள் இருவரும் அலிபாபாவும் நாற்பது
திருடர்களும் படத்துக்குப் போகவில்லை.'
**********
''எனக்கு லேசா சுண்டு விரல் நுனியில் வலிக்குது டாக்டர்.
ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்திடலாமா?''
'எப்படி ஸ்கேன் எடுக்கணும் என்று சரியாகக் கண்டு பிடித்தீர்கள்?''
''நீங்க பயங்கர பணக் கஷ்டத்திலே இருக்கிறதா வெளியே
பேசிக்கிறாங்களே!''
**********
''முன்பெல்லாம் என் காதலர் கடற்கரைக்குப் போனால் கடலை வாங்கித்தருவாரு.''
'இப்ப என்ன ஆச்சு?'
''இப்பெல்லாம் கடலைக் காண்பிக் கிறதோடு சரி.''
**********
''படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம் என்று இருக்கிறாய்?''
'புத்தகத்தை மூடலாம் என்று  இருக்கிறேன்.'
**********
''என்னங்க,என் பல் ரொம்ப வலிக்குது.''
'பல் வலிக்கிற மாதிரி அப்படி என்னத்தைக் கடித்துத் தொலைத்தாய்?'
''உங்க அம்மாவைத்தான்.''
**********
''எங்க படத்துல இடைவேளைக்கு முன் மூன்று பாட்டு,
பின் நான்கு பாட்டு.''
'அப்பா வழக்கமான இடைவேளையோடு சேர்த்து எட்டு
இடைவேளை என்று சொல்லுங்கள்!'
**********
''உங்களுக்கு அல்சர் நோயாமே?''
'அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?'
**********
''இந்தக் காலத்திலேயே பத்து ரூபாய்க்கு மரியாதையே இல்லைங்க,''
'சரியாச் சொன்னீங்க!'
''அப்பா தெரிஞ்சுதான் என் திருமணத்துக்கு பத்து ரூபாய் மொய்
செய்தீர்களா?''
********** 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment