உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கொள்ளை.

0

Posted on : Tuesday, May 29, 2012 | By : ஜெயராஜன் | In :

இந்த உலகம் முழுவதும் கொள்ளைக்கார உலகம்.கொள்ளை
அடிக்கிறவன் யார் தெரியுமா?படித்தவன்,அறிவடைந்தவன்.
அறிவில்லாதவன், கொஞ்ச அறிவுள்ளவனைக் கண்டால்
தெரு நாயைக் காண்கிற மாதிரி மெத்தப் படித்தவனுக்கு.மெத்தத்
தெரிந்தவனுக்குக் கொள்ளை அடிக்கிறது பணக்காரன் இல்லை.
பணக்காரனுக்குக் கொள்ளை அடிக்க கை கொடுக்கிறவன் மெத்தப்
படித்தவன்.படித்தவனுக்குப் பணம் அவ்வளவு தேவையில்லை.
அவனுக்கு ஆட்டி வைக்க வேண்டும்.ஆனால் கொள்ளைக்காரன்
 என்று பேர் மட்டும் வரக் கூடாது.அதை வேறு யாராவது வாங்கிக்
கொள்ள வேண்டும்.பணக்காரனைப் பணக்காரனாகச் செய்கிறவன்
அறிவுக்காரன்.பணக்காரர்களுக்கு அடிமையாகி விட்டார்கள்,
அறிவுக்காரர்கள் என்று  சொல்கிறார்களே,அதை நான் நம்ப மாட்டேன்.
பணக்காரன் என்று யாரும் இல்லை.இந்த உலகத்தில் தெரிந்தவன்,
தெரியாதவன் என்று இரண்டு ஜாதி தான் உண்டு.தெரிந்தவன்
எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு தெரியாதவனைப் பறக்க
விடுகிறான்.அடிமைப் படுத்துகிறான்.  அறிவுதான்  கன்னக்கோல்.
கொள்ளை,கற்பழிக்க,திருட,ஏமாற்ற எல்லாவற்றுக்கும் உதவுகிற
கன்னக்கோல் அறிவு.அறிவு வந்தால் கபடம் வரும்,சூது வரும்,
கொள்ளை வரும்,நாசம் வரும்.
                    ---'மரப்பசு'என்ற நாவலில் தி.ஜானகிராமன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment