உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மாடு மாதிரி

1

Posted on : Thursday, March 06, 2014 | By : ஜெயராஜன் | In :

மனைவி டாக்டரிடம் சொன்னாள்,''டாக்டர்,நீங்கள் என் கணவன் உடல் இளைக்க ,அவரை பச்சைக் காய்கறிகள் சாப்பிடச் சொன்னீர்கள்.எங்கள்  வீட்டுத் தோட்டத்திலேயே எல்லாக் காய்கறிகளும் விளைவதால்,நான் சமைத்துக் கொடுத்தேன்.அவருக்கு அது பிடிக்கவில்லை.தோட்டத்தில் பச்சைக் காய்கறிகளை ,மாடு மாதிரி நான் மேய்ந்து கொள்கிறேன் என்று சொன்னார்.அன்றிலிருந்து தினமும் மூன்று வேளையும் அவரே தோட்டத்திற்கு சென்று காய்கறிகளை சாப்பிடுகிறார்.எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது ,''டாக்டர்,''அதனால் என்னம்மா, நல்லது தானே,இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்..அவள் சொன்னாள்,''தினமும் இரவில் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டதை அசை போடுகிறாரே,டாக்டர்.''
******
ஆசிரியர்  வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.அப்போது பியூன் வந்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகக் கூறினார்.தான் இல்லாதபோது மாணவர்கள் அமைதியாக இருக்க,அவர்களைப் பார்த்து,''நான் வரும் வரை ஆங்கிலப் புத்தகத்தில் பதினைந்தாம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.வந்ததும் கேட்பேன்,யாராவது படிக்காமல் இருந்தால்,அடி உண்டு,''என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றார்.சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்து ,அவர் சொன்ன பாடத்தைப் படித்தானா என்று கேட்க எல்லோரும் படித்ததாக சொன்னார்கள்.பின் ஆசிரியர்,''உண்மையிலேயே யாராவது நான் சொன்னதைப் படித்திருந்தால் அந்த பாடம் இருக்கும் பக்கத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்ட வேண்டும்,''என்றார்.உடனே மாணவர்கள் அனைவரும் பரபரவென்று புத்தகத்தைத் திருப்பினார்கள். அந்தோ!
அப்புத்தகத்தில் மொத்தமே பதினான்கு பாடங்கள் தான் இருந்தன.
******
கணவன் மீது கோபம் கொண்ட மனைவி,''நீங்கள் நன்றாக இருக்க மாட்டீர்கள்.கொஞ்சம் கொஞ்சமாக வேதனை அனுபவித்து சாவீர்கள்,''என்று கத்தினாள்.வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த கணவன் கேட்டான்,''அப்போ,என்னை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்கிறாயா?''
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

முடிவில் நல்ல கேள்வி...! ஹா... ஹா...

Post a Comment