உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மாற்றம்

0

Posted on : Wednesday, December 07, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு துறவி ஒரு மலைப் பகுதிக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார்.சில நாட்களில் அவர் மீது ஏராளமான புகார்கள் அங்கிருந்து அவர் சார்ந்த மடத்துக்கு வந்தன.அவரை அங்கிருந்து திரும்பக் கொண்டு வந்து விடலாமா என்று மடத் தலைவரிடம் கேட்டதற்கு,அவர் சொன்னார்,''எதிர்ப்பு வந்தது என்றால் அவர் அங்கு ஏதோ வேலை செய்ய ஆரம்பித்துள்ளார் என்று பொருள் எனவே அவர் அங்கேயே இருக்கட்டும்.''
நமது வழக்கமானதிலிருந்து ஏதேனும் மாற்றம் வந்தால் நாம் உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.புதுப் பழக்கம் அல்லது செயல் நமக்கு கடினமாகத் தோன்றுகிறது.அதனால் அதை முயற்சித்துப் பார்க்கக்கூட நாம் விரும்புவதில்லை.நம்முடைய எதிர்ப்பை மீறி நாம் மாற்றம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டால் நாம் அதைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளை தேட ஆரம்பித்து விடுவோம்.நல்ல வாய்ப்புகளைக் கூடத் தவிர்க்கவே செய்வோம்.அதற்கு எதிரான  வாதங்களை எடுத்துரைக்க ஆரம்பித்து விடுவோம்.முடியாத நிலையில் அதை செயல் படாமல் ஆக்குவதற்கு குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்வோம்.ஆனால் தொடர்ந்து எதிர்ப்பை வளர விடும்போது நாமே நமக்கு எதிரி ஆகி விடுவோம்.அதற்கும்பின் வேறு வழி இல்லை என்ற நிலை வரும்போது நாம் மாற்றத்தை ஏற்கிறோம்.
''மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது''என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மாற்றம் இல்லையேல் வளர்ச்சி இல்லை.''ஓடுகின்ற ஆற்றில் ஒரே நீரில் நாம் குளிக்க முடியாது''என்பர்.ஏனெனில் ஓட்டத்தினால் நீர் மாறிக் கொண்டே இருக்கிறது.ஓட்டம் இல்லை என்றால் அந்த நீர் தேங்கி ஒரு குட்டையாகி நாற்றம் எடுக்க  ஆரம்பித்துவிடும்.மாற்றமே  ஏற்றம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment