உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அவசரம்

0

Posted on : Thursday, December 01, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லா தன் மனைவியுடன் இரவு விருந்துக்கு சென்றார்.ஹாலில் எல்லோரும் கூடியிருந்தனர்.ஒரு ஓரமாகச் சென்ற முல்லா ஏதோ வழுக்கிக் கீழே விழுந்ததில் அவருடைய பேண்ட் முழங்கால் பகுதி கிழிந்து விட்டது.உடனே அவர் மனைவி அருகிலிருந்த பெண்கள் அறையில் எட்டிப் பார்த்துவிட்டு,''இந்த அறையில் இப்போது யாரும் இல்லை.உள்ளே வாருங்கள்.நான் கிழிந்த பகுதியில் ஒரு ஊக்கை மாட்டி கிழிசல் தெரியாமல் இருக்கச் செய்கிறேன்,''என்றதும் முல்லாவும் உள்ளே சென்றார்.ஆனால் கிழிசல் பெரியதாக இருந்ததால் ஊக்கை  மாட்ட முடியவில்லை.உடனே முல்லாவின் மனைவி ,''சரி,பேண்டைக் கழட்டி கொடுங்கள்.நான் ஊசி வைத்திருக்கிறேன்.கிழிசலைத் தைத்து விடுகிறேன்,''என்று சொல்ல,  முல்லாவும்  பேண்டைக் கழட்டிக் கொடுத்தார்.அப்போது ஒரு பெண் அவசரமாகக் கதவைத் திறந்து கொண்டு வந்ததும் அதிர்ச்சி அடைந்த முல்லாவின் மனைவி,அருகில் இருந்த வேறு  ஒரு கதவைத் திறந்து,''இப்போதைக்கு உள்ளே இருங்கள்.நான் அந்தப் பெண் வெளியே சென்றதும் கூப்பிடுகிறேன் .''என்றார். உள்ளே சென்ற முல்லா அடுத்த நிமிடம் அலறி அடித்துக் கொண்டு கதவைத் தள்ளிக் கொண்டு மீண்டும் பெண்கள் அறைக்குள்ளேயே வந்தார்.என்ன என்று கேட்க,''அவசரத்தில் என்னை ஹாலுக்குள்ளேயே தள்ளி விட்டாயே?''என்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment