உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

லஞ்சம்

1

Posted on : Thursday, January 06, 2011 | By : ஜெயராஜன் | In :

ரவியும் கோபாலும் இரண்டு பணக்காரர்கள். ஒருவருக்கு எதிராக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.ரவி தன வக்கீலிடம் கேட்டார்,''இந்த நீதிபதிக்கு நாம் லஞ்சம் கொடுத்தால் நமக்கு சாதகமாகத் தீர்ப்பு வருமா?'' வக்கீல் சொன்னார்,''ஐயையோ,அவருக்கு லஞ்சம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கோபம் வரும்.லஞ்சம் கொடுக்க முயன்றால் தீர்ப்பு நமக்கு எதிராகவே முடியும்.''சில மாதங்களுக்குப் பின் தீர்ப்பு வந்தது.தீர்ப்பு ரவிக்கு சாதகமாகவே வந்தது.வக்கீலுக்கே இந்த வழக்கு வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது.எனவே தீர்ப்பைக் கேட்டவுடன் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.இருந்தாலும் தன மகிழ்ச்சியை ரவியிடம் தெரியப்படுத்தினார்.அப்போது ரவி சொன்னார்,''உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்,''வக்கீலுக்கு ஒன்றும் புரியவில்லை.ரவி விளக்கினார்,''அன்று நீதிபதி லஞ்சத்துக்கு எதிரானவர் என்றும் லஞ்சம் கொடுத்தால் தீர்ப்பு பாதகமாகி விடும் என்று சொன்னீர்கள் அல்லவா?அன்றே நான் ஒரு தொகையை கோபால் அனுப்பியதாக நீதிபதிக்கு அனுப்பி விட்டேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

MIKKA NANRI

Post a Comment