உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முன் கூட்டியே...

0

Posted on : Friday, December 31, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு மகான் ஒரு சீடனை தண்ணீருக்குள் அழுத்தினார்.அவனைஉள்ளே திண்டாடவிட்டு கடைசியில் வெளியே எடுத்தார்.
''உள்ளே இருந்தபோது மண்,பொன்,பெண் இவைகளை நினைத்தாயா?''என்று கேட்டார்.
''ஐயோ,நினைக்கவே இல்லை.மூச்சுக்கு வழி கிடைக்காதா என்றுதான் ஏங்கினேன்.துடித்தேன்,''என்றான்.
மண்ணும் பொன்னும் சிகிச்சைக்குப் பணம் கொடுக்குமே தவிர சிகிச்சை செய்யாது.
அந்தக் கடைசி நேரத்தில்,நாம் உலகை விட்டுப் பிரியும் நேரத்தில் மண்,பொன் எல்லாமே நமக்கு அற்பமாகத் தோன்றப் போகிறது.
அந்த நினைப்பை சற்று முன் கூட்டியே கொண்டு வந்தால் என்ன?
நாம் அறிவாளியாகவும்,முன் எச்சரிக்கைஉடையவராகவும் இருந்தால் அதைத்தான் செய்வோம்.
                                    ---அழகிக்கு ஆயிரம் நாமம் என்ற நூலில் ஸ்ரீ வேணுகோபாலன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment