உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வால்டேரின் பொன்மொழிகள்.

2

Posted on : Friday, July 04, 2014 | By : ஜெயராஜன் | In :

உலக சிந்தனையாளர்களில் மிக சிறந்த இடத்தில் இருப்பவர் பிரான்ஸ் தேசத்தின் வால்டேர்.அவரின் பொன் மொழிகள் சில:
********
ஒரு கிராமம் நல்ல கிராமமாக இருக்க ஒரு மதம் இருந்தாக வேண்டும்.கடவுள் இல்லையென்றால் அவரைக் கண்டு பிடிப்பது அவசியம் ஆகிறது.சாதாரண மக்களுக்கு பரிசு மற்றும் தண்டனை வழங்கும் கடவுள் ஒருவர் தேவை.
********
ஆதி காலத்தில் அறியாமையும் பயமுமே கடவுள்களை உருவாக்கின. உற்சாகம்,விருப்பம்,வஞ்சனை ஆகியவை அவற்றை அலங்கரித்தன அல்லது சீரழித்தன.வலிவானவை அவற்றை வணங்குகின்றன.உடனே நம்பி விடும் பழக்கம் அவற்றைப் பாதுகாக்கின்றன.பழக்க வழக்கங்கள் அவற்றை மதிக்கின்றன.மனிதர்களின் குருட்டுப் பார்வை அவற்றை சாதகமாக்கிக் கொள்ள, கொடுங்கோன்மை அவற்றைத் தாங்குகின்றன.
********
மனசாட்சி என்பது கடவுளின் குரல் அல்ல.வளர்ந்து கொண்டிருக்கும் சிறுவர்கள் மீது பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் அள்ளிக் கொட்டிய தடைகள்,அவர்கள் மனதில் தேங்கியிருப்பதே மனசாட்சி ஆகிறது.
********
நான் கடவுளைத் தொழுது கொண்டே இறக்கிறேன்;நண்பர்களை நேசித்துக் கொண்டே இறக்கிறேன்.என் விரோதிகளை வெறுக்காது மூட நம்பிக்கைகளை மிகவும் வெறுத்துக் கொண்டே இறக்கிறேன்.
********
சின்னப் புத்தி உடையோரை பொறாமையே அழிக்கிறது.
********
நாம் அனைவரும் பலவீனம் மற்றும் தவறுகளுடன் அமைந்தவர்கள். ஒருவருக்கொருவர் நம்முள் இன்னொருவரின் தவறுகளை மன்னிப்போமாக!இதுவே இயற்கையின் முதல் சட்டம்.
********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

அருமை... உண்மை...

fine.

Post a Comment