உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நமக்குள் ஒரு நரகாசுரன்.

0

Posted on : Friday, October 28, 2011 | By : ஜெயராஜன் | In :

நரகாசுரனை வதைத்து தீமைகளை அழித்து,உலகிற்கு நன்மை செய்த இறைவனுக்கு தீபாவளியன்று நன்றி செலுத்துகிறோம்.ஆனால் நமக்குள்ளே ஒரு நரகாசுரன் அழியாமல் உலவி வருகிறானே,அவனோடு வதம் நடத்தினோமா?நம்மை மிருகமாக்கும் அவனை அடையாளம் காண முடிகிறதா?
நம் நண்பன் உயரும்போது மகிழ்ந்து பாராட்டாமல் பொறாமைத் தீயில் உருகி வெடிக்கிறோமே!எல்லாம் நமக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று பேராசைப் படுகிறோமே!தர்மம்,நியாயம்,நீதி எல்லாம் மற்றவர்க்கு மட்டுமே என்று நினைக்கிறோமே!நமக்கு நாம் விரும்பியது கிடைக்க வேண்டும் என்று முறை தவறுகிறோமே!உழைக்காமல் சோம்பேறித்தனம் என்ற போர்வையில் தாமதம் என்னும் கதகதப்பில் முன்னேற முடியாமல் முடங்கிக் கிடக்கிறோமே!என்னைவிட யாருமில்லை என்ற எண்ணப் புழுதியால் அகந்தை திரை அமைத்து நம் அறிவுப் பார்வை மயங்கிக் கிடக்கிறோமே!ஆற்றலை வெளிப்படுத்தாமல், ஆகப்போவது என்ன என்று அதைரியமடைந்து வளர முடியாமல் முடங்கிக் கிடக்கிறோமே!அப்போது எல்லாம் நம்முள் ஒரு நரகாசுரன் ஆட்சி செய்கிறான்.அவனை அழித்து வதம் செய்வோம்!
அகிலம் வளர வேண்டும்,அதில் அனைவரும் உயர வேண்டும் என்ற பூவானத்தை பூக்கச் செய்வோம்!
மனித நேயம் வளர வேண்டும்,மக்கள் எல்லாம் வாழ வேண்டும் என்ற மத்தாப்பை சிரிக்க செய்வோம்!
அகந்தை என்னும் அணுகுண்டை வெடித்து செயல் இழக்க செய்வோம்!
அன்பு என்னும் அகல் விளக்கைத் தூண்டச் செய்வோம்!
உழைத்து உயர வேண்டும்,அந்த உயர்வில் மற்றவர்க்கு உதவ வேண்டும் என்ற மகிழ்ச்சி வெடியை மலரச்செய்வோம்!
அன்றுதான் உண்மையில் நமக்கு தீபாவளி!

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment