ஒருவன் கஞ்சனாக இருந்தான்.அவன் மகனோ அவனை விடக் கஞ்சனாக வளர்ந்தான்.ஒரு நாள் மகன் வெளியே ஒரு வேலையாக செல்ல வேண்டியிருந்தது.தந்தையிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று பார்த்தால் அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.எனவே தந்தையை தொந்தரவு செய்யாது வெளியே சென்றான்.இரண்டு கி.மீ.தூரம் நடந்து சென்றபின்,வீட்டில் விளக்கை அணைத்தோமா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.அது எரிந்து கொண்டிருந்தால் வீண் செலவாகுமே என்று கருதிய அவன் வீட்டிற்கு திரும்ப நடந்தான்.வீட்டிற்கு வந்தபோது வெளியே நின்றிருந்த அவன் தந்தை விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்.பின் தந்தை ,''நீ சரியாகக் கவனிக்காமல் சென்றதால் இப்போது இரண்டு கி,மீ.தூரம் திரும்ப வந்திருக்கிறாய்.இதனால் உன் செருப்பு அதிகப் படியாகத் தேய்ந்திருக்குமே ,இது நமக்கு கட்டுப்படியாகுமா?''என்று கேட்டார்,பையன் உடனே ,''நான் ஒன்றும் முட்டாள் இல்லை,''என்று சொல்லியவாறு கக்கத்தில் இருந்த செருப்பை எடுத்துக் காட்டினான்.தகப்பன் சொன்னான்,''அந்த மட்டுக்கும் பரவாயில்லை.இப்போது நீ ஏற்கனவே சென்ற தூரம் வரை செருப்பு போடாமலே போ.''
|
|
ஹா... ஹா... நல்ல தகப்பன்.... நல்ல பையன்...
haaa haaa
pls visit here this is suitable place for you https://www.facebook.com/groups/tellstorytamila/