மிகச்சிறந்த தமிழ் அறிஞரான மறைமலை அடிகள் ஆரம்ப காலத்தில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார்.அவருக்கு நேர்முகத் தேர்வு நடந்தது.தேர்வில் தமிழ் இலக்கணத்தில் பல கேள்விகள் கேட்கப்பட்டன.எல்லாவற்றிற்கும் உடனுக்குடன் பதில்களை அவர் கூறினார்.தேர்வுக் குழுவிலிருந்த அனைவருக்கும் திருப்தி.இருந்தாலும் ஒருவர் இறுதியாக ஒரு கேள்வி கேட்க விரும்பினார்.அவர் அடிகளாரிடம்,குற்றியலுகரத்திற்கு இரு உதாரணங்கள் சொல்லுமாறு கேட்டார்.அவரும் உடனே,''எனக்கு தெரியாது,''என்றார்.கேள்வி கேட்டவர்,''கடினமான கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்த உங்களால் இந்த சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையா?''என்று கேட்டார்.அடிகளார்,''சரியான பதிலைத்தானே நான் சொன்னேன்,''என்று சொல்ல கேட்டவர் விழிக்க,அருகிலிருந்த இன்னொருவர்,''சரிதானே அய்யா,எனக்கு என்ற வார்த்தையும்,தெரியாது என்ற வார்த்தையும் குற்றியலுகரம்தானே,''என்றார்.அனைவரும் சிரித்துவிட்டனர்.
|
|
Post a Comment