எப்போதும் தேவையானவை எல்லாம் உன் மனதிற்கு எதிரானவை.எனவே மனமானது எந்த ஒரு உண்மையையும் உன்னுள் நுழைய அனுமதிக்கப் பயப்படுகிறது.அது அந்த உண்மையைத் தட்டிக் கழிக்க ஆயிரத்தொரு காரணங்களைக் கண்டு பிடிக்கிறது.ஏனெனில் உண்மை உனது மனத்தைக் கலைத்துவிடும்.அதனால் மனதிற்கு ஆதரவானதை மட்டுமே அது அனுமதிக்கிறது.மேலும் மனமே ஒரு குப்பை.அதனால் அது குப்பையைத்தான் சேகரிக்கும்.அதையும் மகிழ்வோடு சேகரிக்கும்.
புத்தர் எதையும் மூன்று முறை கூறுவது வழக்கம் .காரணம் கேட்டபோது அவர் சொன்னார்''முதல் முறை நீங்கள் கேட்பதே கிடையாது.இரண்டாம் முறை ஏதாவது ஒரு பகுதியைத்தான் கேட்பீர்கள்.மூன்றாம் முறைதான் நான் கூறுவதை சரியாகக் கேட்கிறீர்கள் முதல் முறை சொல்லும்போது நீங்கள் உட்கருத்தை உணர முடியாது.இரண்டாம் முறை,உணர்ந்தாலும் சரியான முறையில் கருத்தை உணர மாட்டீர்கள்.மூன்றாம் முறை நான் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை சரியாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.''
ஏதாவது ஒன்று தேவையற்றது என்று நீ கண்டு கொண்ட கணமே அதன் மீது உன் கவனத்தை செலுத்தாதே.அதை விட்டு விலகிச் சென்றுவிடு.பொய்யைப் பொய் என்று கண்டு கொள்வதே மெய்யை மெய் என்று கண்டு கொள்வதற்கான ஆரம்பம்.
|
|
நன்றாக முடித்துள்ளீர்கள் சார்...