பென்சில்:என்னை மன்னிக்க வேண்டும்.
ரப்பர்:எதற்காக மன்னிப்பு?
பென்சில்:நான் தவறு செய்யும் போதெல்லாம் நீ சரி செய்கிறாய்.ஆனால் ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய்.என்னால் தானே உனக்கு அந்த பாதிப்பு?
ரப்பர்:நீ தவறு செய்யும்போது சரி செய்வதற்காகவே நான் படைக்கப் பட்டிருக்கிறேன்.என் பணியை நான் செய்கிறேன்.அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சியே.எனக்குத் தெரியும்,நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஒரு நாள் இல்லாமல் போய் விடுவேன்.அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும்.ஆனால் எனக்காக நீ வருத்தப்படுவது எனக்குக் கவலை தருகிறது.
இங்கு ரப்பர் என்பது பெற்றோர்.பென்சில் என்பது அவர்களது பிள்ளைகள். பிள்ளைகள் தவறு செய்யும் போதெல்லாம் அதை அவர்கள் சரி செய்கிறார்கள்.நாளடைவில் அவர்கள் தேய்ந்து போகிறார்கள்.ஆனால் பிள்ளைகளை சரி செய்வதை மகிழ்வுடனே செய்கிறார்கள்.தங்களுக்குப் பதிலாக தன் பிள்ளைகளுக்கு கணவனோ மனைவியோ வந்து விடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.ஆனால் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்காகப் பிள்ளைகள் வருத்தப் படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
|
|
உதாரணம் மிகவும் பிடித்திருந்தது சார்... நன்றி...