உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

Showing posts with label தெரியுமா?. Show all posts
Showing posts with label தெரியுமா?. Show all posts

திதிகள்.

0

Posted on : Thursday, August 28, 2014 | By : ஜெயராஜன் | In :

பலர் அன்றாட வாழ்வில் முக்கிய  காரியங்களை திதி பார்த்து செய்கின்றனர்.திதியின் பேர்கள் எல்லாம் சமஸ்கிருத வார்த்தைகள் அவற்றின் பொருள் தெரியுமா?அமாவாசை மற்றும்  பவுர்ணமியில் இருந்து
ஒவ்வொரு நாளும் அவை மாறுகின்றன.
பிரதமை=முதன்மை,அதாவது முதல் நாள்.(நாட்டின் முதல்வன் பிரதமர்)
துவிதியை.துவி என்றால் இரண்டு.(சைக்கிளைதுவிச்சக்கரவண்டி என்பர்)
திரிதியை.இதற்கு மூன்றாவது என்று பொருள்.
சதுர்த்தி.சதுர்  என்றால் நான்கு.(சதுரம் என்பது நான்கு பக்கங்களை உடையது.)
பஞ்சமி.பாஞ்ச் என்றால் ஐந்து.
சஷ்டி என்றால் ஆறு.
சப்தமி.சப்த என்றால் ஏழு.(சப்த கன்னியர் என்று ஏழு கன்னிமார் தெய்வங்களைக் குறிப்பிடுவர்.)
அஷ்டமி.அஷ்ட என்றால் எட்டு.(உடலில் எட்டு கோணல்கள் இருந்தால் அஷ்ட கோணல் என்பர்.)
நவமி.நவம் என்றால் ஒன்பது.(நவராத்திரி.)
தசமி.தசம் என்றால் பத்து.(தசாவதாரம் என்பது பத்து அவதாரம்)
ஏகாதசி.ஏகம் +தசம்.அதாவது ஒன்று+பத்து=பதினொன்று.
துவாதசி.துவம்+தசம்.அதாவது இரண்டு+பத்து=பன்னிரண்டு.
திரயோதசி.திரியோ+தசம்.அதாவது மூன்று+பத்து.
சதுர்த்தசி.சதுர் +தசம்.அதாவது நான்கு+பத்து.
பதினைந்தாவது நாள் அமாவாசை அல்லது பவுர்ணமி.

தெரிந்ததும் தெரியாததும்-3

0

Posted on : Monday, August 18, 2014 | By : ஜெயராஜன் | In :

*யானைப் பாகனுக்கு மாவுத்தன் என்றும்,குதிரைப் பாகனுக்கு ராவுத்தன் என்றும் பெயர்.மயிலில் குதிரை போல ஏறிச் செல்வதால்,அருணகிரினாதர் ''மயிலேறிய ராவுத்தனே,''என்று முருகனைப் பாடியுள்ளார்.
*அசஹாய சூரன் என்றால் துணை வேண்டா வீரன்என்று பொருள்.
*பூஜ்யத்திற்குத் தமிழில் 'பாழ்' என்று சொல்லப்படுகிறது.
*தம்மிடத்தில் உள்ளவற்றை விட முடியாமல் பற்றிக் கொள்வது பற்று.
பிறரிடத்தில் உள்ளவையும்தமக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புவது அவா.
*'தா' என்பது கேடு,குற்றம் என்னும்  பொருளுடையது.'தாவிலை'என்றால் குற்றம் இல்லை என்று பொருள்.இதுதான் மருவி தேவலை என்று ஆகிவிட்டது.
*அசூயை  என்பது பிறர் நலம் கண்டு பொறாமைப் படுவது.
ஈரிசை என்பது பிறர் துன்பம் கண்டு மகிழ்வது.
*கண்டம் என்றால் பிரிவு.அகண்டம் என்றால் பிரிவில்லாதது.காவேரி நதியிலிருந்து கிளை நதிகள் பிரிவதற்கு முன் உள்ள காவேரியே அகண்ட காவேரி.அகன்ற காவேரி என்பது பிழை.
*யோஜனை என்பது நாலு காத தூரம்;கிட்டத்தட்ட நாற்பது மைல்.
*மைனாவிற்குப் பழைய பெயர் நாகணவாய்ப்புள்.
*ஸ்ரீ காளி புரம் என்பதே மருவி  சீகாழி ஆகிப் பின் சீர்காழி ஆயிற்று.
*கருனை என்பதற்குப் பொரியல் என்று பொருள்.எனவே கருனைக் கிழங்கு
 என்று சொல்வதே சரி.
*கோஜலம் என்பது பசுவின் சிறுநீர்.கோமயம் என்பது பசுவின் சாணம்.
*சொக்கம் என்றால் அழகு.சொக்கத் தங்கம் என்பது கலப்பில்லாதது.சொக்கன் என்றால் அழகன்.
*அரசன் மனைவி,குருவின் மனைவி,அண்ணனின் மனைவி,மாமியார்,தாயார் ஆகியோரை ஐவகைத்தாயார் என்பர்.

தெரிந்ததும் தெரியாததும்-2

0

Posted on : Sunday, August 17, 2014 | By : ஜெயராஜன் | In :

*புத்தருடைய விக்ரகம் உள்ள கோவிலுக்கு சைத்தியம் என்று பெயர்.
*கொல்லாமை,பொய்யாமை,கள்ளுண்ணாமை,காமமின்மை,இரவாமை என்ற ஐந்தை பஞ்சசீலம் என்பர்.
*பாரத யுத்தத்தின் முடிவில் எஞ்சியவர் பத்துப்பேர்தான்.அவர்கள்:பஞ்ச பாண்டவர் ஐவர்,அசுவத்தாமா,கிருபர்,கிருதவர்மா,சாத்தகி,கிருஷ்ணன்.
*பழந் தமிழகத்தில் ஒரு வீரன், தான் கொன்ற புலியின் பற்களைக் கோர்த்து தனது  காதலிக்கு அணிவிக்கும் பழக்கம் இருந்தது.அந்த வழக்கமே பின்னர் தாலி கட்டும் வழக்கமாக மாறியது.
*காமம்,கொலை,கள்ளுண்டல்,பொய்,களவு இவை ஐந்தும் பஞ்சமாபாதகங்கள்.
*சரம் என்றால் நாணல்.வனம் என்றால் காடு .நாணல் மிகுந்த காடு சரவணம்.அங்கு உள்ள பொய்கை சரவணப் பொய்கை.
*இரண்டு கைகள்,இரண்டு கால்கள்,வயிறு,இரண்டு கன்னம்,முகம் என்னும்  எட்டு  அங்கங்கள் நிலத்தில் படும்படி வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம்.இரண்டு கைகள்,இரண்டு முழங்கால்கள்,முகம் என்னும்  ஐந்தும் பூமியில் படும்படி வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம்.
*'காசி'என்றால் பிரகாசிப்பது என்று பொருள்.
*சூர்ப்பம் என்பது முறத்திற்குப் பெயர்.முறம் போன்ற நகங்களை உடையவள் சூர்ப்பனகை.
*'ரசகதளி'என்ற பேரே ரஸ்தாளி என்று மருவியது.
*'ரூப்யம்'என்றால் வெள்ளி என்று பொருள்.முன்னர் வெள்ளியினால் செய்யப் பட்டதால் நாணயத்திற்கு ரூபாய் என்று பெயர் வந்தது.

தெரிந்ததும் தெரியாததும்

1

Posted on : Saturday, August 16, 2014 | By : ஜெயராஜன் | In :

நாம் அன்றாட  வாழ்வில் புரியாமல் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றிற்கு அறிஞர் கி.வா. ஜெகநாதன் எழுதிய விடைகள் ஆயிரம் என்ற நூலில் விடைகள் இருக்கின்றன. அவற்றில் சில:
*அரிக்கு இல்லமாகிய ஊர்தான் அரியிலூர்.அதுவே மருவி அரியலூர் ஆகிற்று.
*சீதை அசோக வனத்தில் இருந்த காலம் பத்து மாதங்கள்.
*பாவை என்பது பொம்மையைக் குறிக்கும்.பொம்மை போல வண்ணங்களுடன்  அழகாக இருப்பதால்  பெண்களைப் பாவை என்கின்றனர். பூவை என்பது மைனாவிற்குப் பெயர்.அதன் பேச்சைப் போல இனிமையாகப் பேசுவதால் மங்கையரை பூவை என்று அழைக்கின்றனர்.
*கர்ணனுடைய இயற்பெயர் விஷுஷேணன் .
*பொய்கை என்பது  இயற்கையான நீர்நிலை.தடாகம் என்பது மனிதர் உருவாக்கிய நீர்நிலை.
*தீய குணம் உடையவர்களோடு பழகுவது தீநட்பு.அகத்தில் நட்பின்றி,புறத்தில் நண்பர்போல நடிப்பவரின் நட்பு கூடா நட்பு.
*மனிதன் உண்பது உணவு.விலங்குகள் உண்பது இரை .
*ஜல்பம்,விதண்டை என்று வாதங்களில் இரு வகை உண்டு.வாதப் பிரதிவாதிகள் தமது குணங்களையும் எதிரியின் குற்றங்களையும் எடுத்துரைப்பது ஜல்பம்.தமது குற்றம் மறைத்து எதிரியைக் கண்டிப்பது விதண்டை.
*ஒரு கோவிலில் கர்ப்பக் கிரகத்துக்கு மேலே உள்ளதை விமானம் என்றும்,மற்றவற்றைக் கோபுரம் என்றும் கூறுவது மரபு.
*'அனுத்தமா' என்பதற்கு 'தனக்கு மேற்பட்டவர் இல்லாதவள்' என்று பொருள்.


தெரியுமா-7

0

Posted on : Friday, March 07, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆணுக்குஉடலின் மற்ற பாகங்களில் வளர்வதைக்காட்டிலும் முகத்தில் வேகமாக முடி வளர்கிறது.
******
கையில் நடு விரலில் நகம்,மற்ற விரல்களைக் காட்டிலும் வேகமாக வளர்கிறது.
******
நம் தலையில் வளரும் முடியின் சராசரி வயது மூன்றிலிருந்து ஏழு வருடம்.
******
கை நகங்கள்,கால் நகங்களைவிட நான்கு பங்கு வேகத்துடன் வளர்கின்றன.
******
பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண் இமைகளைக் கொட்டுகிறார்கள்.
******
பெண்களை விட ஆண்களுக்குத்தான் விக்கல் அதிகம் வருகிறது.
******
உங்கள் ஆயுள் முழுவதும் உங்கள் வாயில் ஊறும் உமிழ் நீரானது இரண்டு நீச்சல் குளத்தை நிரப்பக் கூடியதாகும்.
******
பிறக்கும் குழந்தைகளுக்கு நிறங்களைப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அவர்களுக்கு கருப்பும் வெள்ளையும் தான்  தெரியும்.(நிறக்குருடு)
******
ஒரு மனிதனால் இருபது நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடியும்.ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் நீர் அருந்தாமல் இருக்க முடியாது.
******

சிட்டி,டவுன்.

1

Posted on : Tuesday, January 21, 2014 | By : ஜெயராஜன் | In :

ஆங்கிலத்தில் சிட்டி என்றும் டவுன் என்பதையும் தமிழில் நகரம் என்றே அழைக்கிறோம்.சமீப காலமாக சிட்டியை மாநகரம் அழைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.சிட்டிக்கும் டவுனுக்கும் என்ன வித்தியாசம்?ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள ஊர் சிட்டி என்றும் ஐந்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மக்கள் தொகையிருந்தால் அதை டவுன் என்றும்
கூறப்படுகிறது.சிட்டி,டவுன் என்பவை  இடங்களைத்தான் தற்போது குறிக்கின்றன..ஆனால் ஆரம்ப காலத்தில் கிரீசிலும் ரோமாபுரியிலும் சிட்டி என்ற சொல் வேறு அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.சிவிட்டாஸ் என்ற லத்தீன் மொழியின் வார்த்தையிலிருந்துதான் சிட்டி என்ற சொல் உருவானது.முற்காலத்தில் கிரீசிலும் ரோமாபுரியிலும் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் வாழ்ந்தன.இந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குப் பூரண சுதந்திரம் பெற்றிருந்தார்கள்.இப்படிப்பட்ட ஒரு மக்கள் சமுதாயமே சிட்டி என்று அழைக்கப்பட்டது.ஒவ்வொரு சிட்டியும் ஒவ்வொரு ராஜ்யமாக இருந்தது.
சிட்டி என்பதற்கு அரிஸ்டாட்டில் கூறும் விளக்கம்;
''கூடிய வரையில் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் இருக்கும் பொருட்டு மக்கள் பலர் .தங்கள் குடும்பத்தோடு பிற குடும்பத்தினருடன் ஒருவருக்கொருவர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் வசிப்பதற்குத்தான் சிட்டி என்று பெயர்.''சிட்டியின் நோக்கம் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்என்பதே.இதற்காகவே பல திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டன.

சீட்டாட்டம்.

1

Posted on : Thursday, December 12, 2013 | By : ஜெயராஜன் | In :

சீட்டாட்டம் எப்படி வந்தது என்று தெரியுமா?
ஒரு முறை பிரெஞ்ச் மன்னன் ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.ஒரு விசயத்தில் கவனம் செலுத்தாமல் பிரமை பிடித்து பல விசயங்களை உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான்.ஒருஅமைச்சர் இந்த நேரம்தான் ராஜா (கிங்),ராணி(க்வின்),மந்திரி(ஜேக்)இவர்களைப் படமாக்கி மன்னனின் கவனத்தை ஒரே விசயத்தில் கவனம் செலுத்தச் செய்யும் விளையாட்டான சீட்டாட்டத்தைக் கண்டு பிடித்தார்.மன்னன் விளையாடினான்.தொடர்ந்து விளையாடினான்.மன்னனின் பைத்தியம் தெளிந்து விட்டது.
ஆனால் இன்று சீட்டாட்டம் பலரைப் பைத்தியம் ஆக்கி விட்டது.
 அதில் உள்ள டைமண்ட் வைரத்தையும்,ஹார்ட் இருதயத்தையும்,ஸ்பேட் மண்வெட்டியையும்,கிளாவர் பிரண்டைத் தண்டு இலையையும் குறிக்கும்.
''சீட்டாடினால் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள வைரம் போன்ற பொருட்களை இழப்பான்.இதனால் மனம் நொந்து இதயம் வெடித்து சாவான்.அவனை மண் வெட்டியால் குழி தோண்டிப் புதைக்க நேரிடும்.குழி மீது பிரண்டை செடி வளர்ந்து வரும்.''என்று இந்த சீட்டுக் கட்டு சொல்லாமல் சொல்கிறது.
******
குடையை ஆங்கிலத்தில் UMBRELLA என்று சொல்வார்கள்.இது ஒரு இத்தாலிய வார்த்தை ஆகும்.UMBRA என்பது நிழலையும் YELLOW என்பது மஞ்சளையும் குறிக்கும்.மஞ்சள் துணி தரும் நிழல் என்று பொருள்.
******
பாகு என்றால் இனிப்பு என்று பொருள்.அல்  என்றால் அற்றுப் போகச் செய்தல் என்று பொருள்.பாகு+அல் +காய்=பாகற்காய். அதாவது இனிப்பை இல்லாமல் செய்யும் காய்தான் பாகற்காய்.
******
கருவுற்ற காலத்தில் கருப்பை குளிர்ந்து விடாமல் தேவையான வெப்பம் பெற முன் காலத்தில் கறிவேப்பிலை சாப்பிடுவார்கள்.கரு+வெப்ப+இலை=கருவெப்ப இலை.இதுதான் நாளடைவில் கறிவேப்பிலை என்றாயிற்று.
******

யாருக்குப் பெண்?

0

Posted on : Tuesday, December 10, 2013 | By : ஜெயராஜன் | In :

மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் கொடிய விலங்குகளின் தொல்லை அதிகம் இருந்ததால்,புலி வேட்டையில் வெற்றி பெற்றவனுக்கே பெண் கொடுத்தார்கள்.
காடும் காடு சார்ந்த முல்லை  நிலத்தில் ஒரு பெண் பிறந்ததுமே ஒரு காளையினை வளர்க்கத் துவங்கி விடுவார்கள்.பெண் பருவமடைந்ததும் காளையை அடக்குபவனுக்கே பெண்ணைக் கொடுத்தார்கள்.
வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் இளவட்டக்கல் தூக்கியவனுக்கே பெண்.
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் நீந்துபவனுக்கு மரியாதை இருந்தது.நீச்சல் வீரனுக்கும்,படகுப் போட்டியில் வெல்பவனுக்குமே பெண் கிடைப்பாள்.
காலம் செல்லச் செல்ல வீரர்களுக்கு இருந்த மரியாதை  ஆயதங்களைக் கையாளக்கூடிய திறமை சாலிகளுக்குக் கிடைத்தது.
இப்போது பணம் படித்தவர்களுக்கே முதல் மரியாதை.
வரும் காலத்தில் உடல் நலன் அடிப்படையிலேயே திருமணம் நடக்கும்.

போர்க்கப்பல்

0

Posted on : Monday, December 09, 2013 | By : ஜெயராஜன் | In :

கடற் படையில் உபயோகப் படுத்தப்படும் கப்பல்கள் பல வகைப்படும்.அவை;
ரோந்துக் கப்பல்.(CRUISER)
1.நாசகாரி (DESTROYER)
2.விமானம் தாங்கிக் கப்பல்.(AIRCRAFT CARRIER.)
3.நீர் மூழ்கிக் கப்பல்.(SUBMARINE)
4.கண்ணிவெடிப் படகு.(TORPEDO BOAT)
5.கொடிக்கப்பல் அல்லது தளபதிக் கப்பல் (FLAG SHIP)
6.கட்டளைக் கப்பல்.(COMMAND SHIP)
7.ஓர் அடுக்கு பீரங்கிக் கப்பல்.(CORVETTE)
8.வேவுக்கப்பல்.(PATROL VESSEL)
9.கண்ணிவெடி வைக்கும் கப்பல்.(MINE LAYER)
10.துணைக் கப்பல் அல்லது ஊழியக் கப்பல்.(TENDER)
11.கண்ணிவெடி ஒழிப்புக் கப்பல்.(MINE SWEEPER)
12.பீரங்கிப் படகு.(GUN BOAT)
13.படை வீரர்களை இறக்கும் கப்பல்.(LANDING SHIP)
14.கப்பலை இழுத்து செல்லும் இழுவைக் கப்பல்.(TUG)
15.காவல் கப்பல்.(GUARD SHIP)
******
அமெரிக்காவை சேர்ந்த நீல்  ஆர்ம் ஸ்ட்ராங் மற்றும் இருவர் முதல் முதலில் நிலவுக்கு சென்ற போது அங்கு நினைவுக் கல்  நாட்டினர்.அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இது தான்.
''HERE MEN FROM THE PLANET EARTH FIRST SET FOOT UPON THE MOON.JULY 1969A.D.WE CAME TO PEACE FOR ALL MANKIND.''
******

மரத்தின் பயன்.

1

Posted on : Sunday, December 08, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு விஞ்ஞானி மரத்தின் சேவையை பணத்தின் அடிப்படையில் கணக்கிட்டிருக்கிறார்.அதன்படி ஐம்பது ஆண்டுகள் வரை வாழும் ஒரு சாதாரண மரம் தனது ஆயுத காலத்தில் 18 லட்சம் ரூபாய் பெறுமான சேவை செய்கிறது.
1.ஒவ்வொரு ஆண்டும் அம்மரம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ50000/-
2.புரதப் பொருளாக மாற்றும் சேவை ரூ.20000/-
3.ஒரு மரம் காற்றை சுத்திகரிக்கும் செயலை நாம் செய்தால் அதற்கு ஆகும் செலவு  ரூ.5,00,000/-
4.மரம் வெட்டப்பட்டால் அங்கு அதே அளவு மண் வளத்தைப் பாதுகாக்க 50ஆண்டுகளில் நமக்கு ஆகும் செலவு ரூ.3,00,000/-
5.மரத்தின் நிழலிலும்,பாதுகாப்பிலும் தங்கும் பறவைகள்,விலங்குகள் முதலியவற்றிற்கு மரம் செய்யும் சேவையை நாம்செய்தால்  அதற்கு ஆகும் செலவு ரூ.3,00,000/-
ஒரு மரம் வெட்டுமுன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.
******
தபால் துறை செயல் படத் துவங்கிய புதிதில் தபால்களைக் குதிரை வீரர்கள் எடுத்து சென்றனர்.ஒரு இடத்தில் அவர்கள் உணவருந்தி இளைப்பாறிய பிறகு குதிரைகளை மாற்றிக் கொண்டு செல்வார்கள்.அந்த இடத்திற்கு 'போஸ்ட்'என்று பெயர்.நாளடைவில் அந்தப் பெயரே கடிதங்களுக்கு வந்துவிட்டது.
******

வார்த்தை ஜாலம்

1

Posted on : Saturday, December 07, 2013 | By : ஜெயராஜன் | In :

ஆங்கிலத்தில்,ஒரே மாதிரி உச்சரிப்பில் முடியும் வார்த்தைகளின் தொகுப்பு நிறைய உள்ளன.அவற்றில்ஒன்றைப் பார்க்கலாம்.
QUADROON  -வெள்ளையருக்கும்,நீக்ரோவிற்கும் பிறந்த குழந்தை.
LAGOON        -கடலோடு இணைந்த ஆழமற்ற ஏரி
GAMBROON --லினென் துணி.
GOSSOON    --ஐரிஸ் மொழியில் சிறுவனைக் குறிக்கும் சொல்.
POLTROON  --முழுக்கோழை
LAMPOON   --ஒருவனை கடுமையாக,வழக்கமாகப் பரிகசித்துக் கூறும் வர்ணனை .
SPITTOON   --எச்சில் துப்பப் பயன்படும் பாத்திரம்.
DOUBLOON--ஸ்பானிய நாணயம்.
COCOON    --புழு வண்ணத்துப் பூச்சியாக மாறும் காலத்தில் வாழும் கூடு.
PONTOON  --அடி பாகம் தட்டையாக உள்ள படகு.
TYPHOON  --கடும் புயல் காற்று.
MAROON   வான வேடிக்கை.


தமிழ் நூல்கள்.

0

Posted on : Friday, August 30, 2013 | By : ஜெயராஜன் | In :

ஆற்றுப்படை  நூல்கள்:
திருமுருகாற்றுப்படை.
பொருநராற்றுப்படை.
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
தணிகையாற்றுப்படை.
******
எட்டுத்தொகை நூல்கள்:
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு .
******
ஐம்பெரும் காப்பியங்கள் :
சீவக சிந்தாமணி,சிலப்பதிகாரம்,மணிமேகலை,குண்டலகேசி,வளையாபதி.
******
ஐஞ்சிறு காப்பியங்கள்:
யசோதரா காவியம், உதயணகுமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம், சூளாமணி.
******
கடையெழு வள்ளல்கள்:
பாரி,எழினி,மலயன்,ஆய் ஆண்டிரன்,நள்ளி,பேகன்,ஓரி.
******

இது தெரியுமா?

0

Posted on : Wednesday, August 21, 2013 | By : ஜெயராஜன் | In :

சங்கரன் என்றால் யார்?சம் என்றால் மங்களம்.கரோதி என்றால் உண்டு பண்ணுதல் .எனவே மங்களம் உண்டு பண்ணுபவன் தான் சங்கரன்.
******
சேஷன் என்றால் தாசன்,அடிமை என்று பொருள்.
******
நிர்மலன் என்றால் அழுக்கில்லாதவன் என்று பொருள்.
******
அச்சுதன் என்றால் தான் நழுவி கீழே விழாதவன்:தன்னைப் பற்றியவர்களை நழுவ விடாதவன்.
******
சாரு  என்றால் அழகு.
******
அஸ்தி என்றால் இருக்கிறது என்று பொருள்.இருக்கிறது என்று சொல்பவன் ஆஸ்திகன்.நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள்.இல்லை என்று சொல்பவன் நாஸ்திகன்.
******
கிருஷ்ணன் என்ற பேருக்குப் பொருள் என்ன தெரியுமா?க்ரு என்றால்  பூமி.ண என்றால் விடுவித்தல்.பூமியிலிருந்து நம்மை விடுவித்து மோட்சத்தைக் கொடுப்பவன் கிருஷ்ணன்.
******
சுதர்ஷன் என்றால் நல்ல பாதையைக் காட்டுபவன் என்று பொருள்.
******
விபு என்றால் எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள்.
******
******

மனிதன் எத்தனை வகை!

1

Posted on : Tuesday, August 06, 2013 | By : ஜெயராஜன் | In :

மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1.Introverts:மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..
2.Extroverts:எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள்.வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.
3.ambiverts:மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.

மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
தைல புத்தி:ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும்.அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.
கிரத  புத்தி: நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும்.பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால்  சொல்லத் தெரியாது.
கம்பள புத்தி:விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பதுபோல வரும்போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும்போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.
களி மண்  புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது.

தெரியுமா?-5

1

Posted on : Wednesday, July 03, 2013 | By : ஜெயராஜன் | In :

ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது.அதை ஊதி அணைத்துவிட்டு உடனே மறுபடியும் தீக்குச்சி கொண்டு பொருத்தினால் உடனே பற்றிக் கொள்கிறது.ஆனால் புதிதாக ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க சிறிது நேரமாகிறது.ஏன்?
            எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்தாலும் அதைச் சுற்றி மெழுகு  ஆவி சுற்றியிருக்கும்.தீப்பொறி கண்டவுடன் மெழுகுவர்த்தி உடனே பற்றிக் கொள்ள அது பயன் படுகிறது.
******
துணியை அயர்ன் செய்யும்போது தண்ணீரில்தெளித்து பின் சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது மட்டும் ஒழுங்காகத் தேய்க்க வருகிறது.ஏன்?
             துணியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீர் பட்டவுடன் நன்கு பரவி துணிக்கு மிருதுத் தன்மை  கொடுக்கிறது.சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது தண்ணீர் ஆவியாகி stiff ஆன surface கிடைக்கிறது.
******
ஒரு காகிதத்தின் கனம் 0.01அங்குலம்.அதை 50 முறை மடக்கினால் அதன் கனம் எவ்வளவு இருக்கும்?
            பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் இருக்கும்.
******
ஒரு பேப்பரில் ஒரு கத்தியை வைத்து மடக்கிப்  பின் ஒரு உருளைக் கிழங்கை அறுத்தால் உருளைக் கிழங்கு அறுபடும்.ஆனால் பேப்பரை வெளியே எடுத்துப் பார்த்தால் பேப்பர் அறுபடாமல் அப்படியே இருக்கும்.  காரணம் என்ன?
            
          பேப்பரின் fibre உருளைக் கிழங்கின் fibre  ஐ விட பலமானது.அதனால் பேப்பர் அறுபடுவதில்லை.உருளைக் கிழங்கிற்கு பதிலாக கடினமான பொருள் ஒன்றினை அறுத்தால் பேப்பர் அறுபடும்.
******

தமிழரின் கால அளவுகள்

1

Posted on : Tuesday, July 02, 2013 | By : ஜெயராஜன் | In :

தமிழர்கள் பழங்காலத்திலேயே நுண்ணிய கால அளவுகளை வகுத்துள்ளனர். .அதன் விபரம்:
60 தற்பரை=ஒரு வினாடி.
60 வினாடி=ஒரு நாழிகை
60 நாழிகை=ஒரு நாள்
3.75 நாழிகை=ஒரு முழுத்தம்.
2 முழுத்தம்=ஒரு யாமம்.
8 யாமம்=ஒரு நாள்.
7 நாள்=ஒரு கிழமை.
15 நாள்=ஒரு பக்கம்.
2 பக்கம்=ஒரு மாதம்.
2 மாதம்=ஒரு பருவம்.
3பருவம்=ஒரு செலவு.
2 செல வு=ஒரு ஆண்டு.
365நாள்,15நாளிகை,31வினாடி,15 தற்பரைகள்=ஒரு ஆண்டு.

தெரியுமா-4

2

Posted on : Thursday, June 13, 2013 | By : ஜெயராஜன் | In :

கைலாய மலை தற்போது சீனாவில் உள்ளது.
******
காணி நிலம் என்பது 1.32 ஏக்கர்.
******
டென்மார்க்கின் தேசியக் கொடிதான் உலகில் மிகப் பெரியது.
******
டாக்காவில் எழு நூறுக்கும் ஏற்பட்ட மசூதிகள் உள்ளன.எனவே அதை 'மசூதிகளின் நகரம்' என்று அழைக்கின்றனர்.
******
இத்தாலியில் உள்ள சால்பரினோ என்ற இடத்தில் நடந்த போரின் கொடுமையைக் கண்டு மனித நேயமிக்க ஹென்றி டுனான்ட் என்பவரால் ஏற்படுத்தப் பட்டதுதான் செஞ்சிலுவை சங்கம் .
******
தமிழ் நாட்டின் முக்கிய சின்னங்கள்:
மரம்-பனைமரம்.
விலங்கு -வரையாடு.
மலர்-செங்காந்தள் மலர்.
பறவை-புறா.
******
தந்தையின் மீது பாசமும் தாயைப் போட்டியாளராக நினைத்து வெறுக்கும் மகளுக்கு உள்ள மனநோய்க்கு 'எலெக்ட்ரோ காம்ப்ளெக்ஸ் 'என்று பெயர்.
******
கழுத்து இல்லாத ஒரே உயிரினம்,''மீன்''
******
உலகின் மிகப் பெரிய மலை சிகரங்களைக் கொண்ட நாடு,நேபாளம்.
******
ஆசியாவின் குளிர்ச்சியான பாலைவனம்,கோபி பாலைவனம்.
******
முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது,'குதா ஹபீஸ்'என்று சொல்வர்.இதற்கு,'கடவுள் உம்மை பாதுகாப்பாராக'என்று பொருள்.
******
உலகின் மிகக் குறுகிய எல்லைக்கோடு ஸ்பெயின் நாட்டிற்கும் ஜிப்ரால்டருக்கும் இடையில் உள்ளது.
******

இல்லை,இல்லை.

1

Posted on : Thursday, April 18, 2013 | By : ஜெயராஜன் | In :

ஈசலுக்கு வயிறு இல்லை.
தேளுக்குக் காதுகள் இல்லை.
மண் புழுக்களுக்குக் கண்கள் இல்லை.
ஈக்களுக்குப் பற்கள் இல்லை.
வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாய் இல்லை.
ஆண் கொசுக்கள் கடிப்பது இல்லை.
பூச்சிகள்,புழுக்கள் தூங்குவது இல்லை.
ஆமைக்குப் பற்கள் இல்லை.
முதலை,மீன் பாம்பின் விழிகளுக்கு இமைகள் இல்லை.
குளிர்ப்  பிரதேசத்தில் பல்லிகளே இல்லை.
குளிர் காலத்தில் குயில் கூவுவது இல்லை.
கிவி பறவை பறப்பதில்லை.
வௌவால் முட்டை இடுவதில்லை.
பறவைகளுக்கு சிறுநீர்ப் பை இல்லை.
******
ஏழு பிறப்பிலும் நான் உனக்கே மகனாகப் பிறக்கக் வேண்டும் என்று தாயிடம் சொல்வார்கள்.அந்த ஏழு பிறப்புக்கள் யாவை?
தேவர்,மனிதன்,விலங்கு,பறவை,ஊர்வன,நீர் வாழ்வன ,தாவரம்.
******
ஈரேழு உலகம் என்று சொல்கிறார்களே,அவை என்ன தெரியுமா?
மேல் உலகம்:
பூலோகம்,புவம்,சொர்க்கம்,மர ,தவம்.பிரமம்,சிவலோகம்.
கீழ் உலகம்:
அதலம் ,விதலம்,சுதலம்,நிதலம்,தராதலம்,பிசாதலம்,பாதாளம்.
******
நமக்கு 32 பற்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.அவற்றின் வேலை என்ன?
கடிப்பதற்கு -8 பற்கள்
கிழிப்பதற்கு-4  பற்கள்.
வெட்டுவதற்கு-8 பற்கள்.
அரைப்பதற்கு-12 பற்கள்.
******
******

தெரியுமா?-4

0

Posted on : Tuesday, April 16, 2013 | By : ஜெயராஜன் | In :

எரிமலைகளில் இரண்டு வகைகள் உள்ளன.
பெசால்டின்:பூமிக்குக் கீழே ஐந்து கி.மீ.ஆழத்தில் நெருப்புக் குழம்பு ஆறு போல ஓடிக் கொண்டிருக்கும்.பூமிக்கு மேலே வராது.இவ்வகை ஆப்பிரிக்கக் காடுகளில் உண்டு.
அப்சிடியன்;பூமிக்குக் கீழே 12 கி.மீ.ஆழத்தில் இருக்கும்.இதுதான் எரிமலையாய் வெடித்து வெளியில் வரும்.
******
உணவுப் பொருட்களை நீண்ட நேரம் நன்றாக மென்று சாப்பிட்டால் அந்த உணவு மிக சுவையாய் இருப்பதேன்?
நீண்ட நேரம் மெல்லும்போது எச்சில் நிறைய சுரக்கும்.அதில் இருக்கும் அமிலேஸ் (amilase)என்ற சுரப்பியானது(enzyme) உணவில் உள்ள ஸ்டார்ச்சை உடைத்து சாதாரண சர்க்கரையாக மாற்றுகிறது.எனவே உணவு சுவையாய் இருக்கிறது.
******
வீட்டில் ஆப்பம்,கேக் இவை செய்யும்போது சோடா உப்பு போடுவார்கள்.ஏன் தெரியுமா?
சோடா உப்பு என்பது சோடியம் பைகார்பனேட் ஆகும்.அடுப்பில் சூடு படுத்தப்படும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்சைட் வெளிவருகிறது.இந்த வாயுவானது சிறு சிறு குமிழ்களாக அந்த மாவுக்கு இடையில் மாட்டிக் கொள்கிறது.மேலும் சூடாகையில் இந்த வாயுவானது விரிவாகி ஆப்பத்தையோ,கேக்கையோ இலேசானதாகவும் பஞ்சு போல மென்மையானதாகவும் ஆக்குகிறது.பூரி உப்புவது கூட இந்த கார்பன் டை ஆக்சைடினால் தான்.
******
தீக்கோழி(ostrich) இடும் முட்டைதான் பறவை முட்டைகளிலேயே மிகப் பெரியது.ஒரு முட்டையை 12 பேர் சாப்பிடலாம்.ஹம்மிங் பறவை (humming bird)இடும் முட்டைதான் மிகச் சிறியது.ஒரு முத்தின் அளவுதான் இருக்கும்.
******
பறக்கும்போது உறங்கும் பறவை கீகல்.
******
தக்காளியை முதலில் பயிர் செய்த நாடு அயர்லாந்து.
******

தெரியுமா-3

3

Posted on : Saturday, April 13, 2013 | By : ஜெயராஜன் | In :

இந்து மகா சமுத்திரத்தில் மிகப் பெரிய தீவு 'மடகாஸ்கர்'
******
மூக்குக் கண்ணாடி இத்தாலியில் தோன்றியது.
******
யூதர்களின் புனித நூல் 'தோரா'
******
கண்கள் இருந்தும் பார்வை இல்லாத பிராணி 'வௌவால் '
******
ஆப்பிளில் 'மாலிக் அமிலம்'அதிகம் உள்ளது.
******
பறவைகளுக்கு வியர்ப்பதில்லை.
******
உலகில் அதிக முட்டையிடும் உயிரினம்,'கரையான்'.
******
சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய மன்னர் ஷீபுவாங்டி.
******
'ஆன்டிசெப்டிக்'மருத்துவ சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர் 'லூயி பாஸ்டர்'
******
அதிகமான காட்டு வளத்தை 'பச்சைத்தங்கம்' என்று அழைப்பர்.
******
நெருப்புக் கோழியை'ஒட்டகப்பறவை'என்று குறிப்பிடுவார்கள்.
******
மயக்க மருந்தைக் கண்டு பிடித்தவர் சர் ஜேம்ஸ் சிம்சன்.
******
'கடல்களின் அரசி'என்று அழைக்கப்படும் நாடு ,'இங்கிலாந்து'
******
நாய்க்கு 42 பற்கள்.
******
ஆமைக்குப் பற்கள் கிடையாது.உறுதியான தாடைகள் தான் உண்டு.
******
சீனப் பெரும் சுவரின் நீளம் 3460 கி.மீ.
******
மாலத்தீவில் 1200 தீவுகள் உள்ளன.
******
உலகில் அதிக உபநதிகளைக் கொண்ட ஆறு 'அமேசான்'
******
மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டத்தை'கடலின் ஆபரணங்கள்'என்பர்.
******
பிரெஞ்சு கயானாவுக்கு'பேய்களின் தீவு'என்று பெயர்.
******