உவமைக் கவிஞர் சுரதாவைப் பார்க்க உயரம் குறைவான ஒருவர் வந்தார்.அவர் சுரதாவிடம்,''நீங்கள் ஒரு பாடலில் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா,ஆறடி நிலமே சொந்தமடா 'என்று சொல்லியிருக்கிறீர்கள். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமோ,'சட்டப்படி பார்த்தா எட்டடிதான் சொந்தம்'என்று எழுதியுள்ளார்.எது சரி?''என்று கேட்டார்.அதற்கு சுரதா சொன்னார்,''பட்டுக்கோட்டையார் நன்கு வளர்ந்தவர்.எனவே அவருக்கு எட்டடி தேவைப்பட்டது.நான் சராசரியான ஆள்.எனவே எனக்கு ஆறடி போதும்.உன்னைப்போன்ற குள்ளமான ஆட்களுக்கு மூன்றடியே போதும்.''கேட்டவர் உட்பட சுற்றியிருந்த அனைவரும் கொல்லென்று சிரித்துவிட்டனர்.
|
|
Post a Comment