நான் என்னை மிக நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றேனே, ,உள்ளே எவ்வளவு கசடுகள்,எத்தனை திருட்டுத் தனங்கள் என்று மற்றவர் எவரின் உதவியுமின்றி,இடையூறுமின்றி நம்மை நாமே அனுமானிக்கின்ற நிலை மௌனத்தில் ஏற்படுகிறது.
******
செய்த குற்றத்தை விட,''ஐயோ,செய்து விட்டோமே,''என்ற மனப் புழுக்கம் தான் பெரிய வேதனை.
******
வெளி உலகத்தை நாம் பார்ப்பதில்,கவனிப்பதில் மிகப் பெரிய தவறு இருக்கிறது.ஒன்று,பாதி சிந்தனையோடு பார்த்தபடி இருப்போம்,அல்லது நமது அபிப்பிராயங்களை அதில் ஏற்றி பார்த்தபடி இருப்போம்.எதிரே என்ன இருக்கிறதோ,அந்த விஷயத்தை அதன் குணங்களோடு நாம் பார்ப்பதில்லை.
******
எவருடைய வார்த்தைகளாவது சுருக்கென்று தைத்தால்,எவருடைய இடைஞ்சலாவது காலை உருட்டினால்,கலவரப்பட்டு விடக் கூடாது.நின்று நிதானித்து வலையைத் தாங்கிக் கொண்டு மெல்ல முன்னேற வேண்டும்.நாம் சறுக்குவதற்கு இது மாதிரி விஷயங்கள் நமக்கு முன் வந்து தோன்றும்.
******
--பாலகுமாரன்.
|
|
Post a Comment