முட்டாளை நண்பனாக்கிக் கொள்ளாதே,அவன்
உனக்கு நல்லது செய்வதாக நினைத்து கெடுதல் செய்வான்.
கஞ்சனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உனக்குக் கடுமையான பண நெருக்கடியின் போது ஓடிவிடுவான்.
போக்கிரியை நண்பனாக்கிக் கொள்ளாதே,
உன்னையும்,உன் நட்பையும் மலிவுச்சரக்காக விற்று விடுவான்.
பொய்யனை நண்பனாக்கிக் கொள்ளாதே,
தொலைவில் இருப்பதைப் பக்கத்தில் இருப்பது போலவும்,
பக்கத்தில் இருப்பதைத் தொலைவில் இருப்பது போலவும்
தோற்றமளிக்கும்படி, கானல் நீர் பிரமையை ஏற்படுத்தி விடுவான்.
|
|
Post a Comment