எப்பேர்ப்பட்ட கெட்டிக்காரர்கள் கூட உணர்ச்சி வசப்படும்போதும், சூழ் நிலைகளின் கைதிகளாக ஆகின்றபோதும், தவறான முடிவுகளையே எடுக்கிறார்கள்.மித மிஞ்சிய மகிழ்ச்சியான கணங்களிலும்,மூட் அவுட் ஆகிற நேரங்களிலும்.பரபரப்பான நேரத்திலும் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பாலும் கோளாறில் தான் முடிகின்றன.எனவே முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது மட்டும் கீழ்க்கண்ட கேள்விகளை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
*இந்த முடிவை உடனே எடுத்தாக வேண்டுமா?
*இந்த முடிவை எடுக்க போதுமான நேரம் சிந்திக்கச் செலவழித்தோமா?
*நம் விருப்பத்தை மட்டும் மனதில் கொள்ளாது,இது நமக்கு நன்மை செய்யுமா என்று சிந்தித்தோமா?
*யாருடைய வற்புறுத்தலின் பேரிலாவது இந்த முடிவை எடுத்தோமா?
*நமக்கு இந்த முடிவில் முழு உடன்பாடு உண்டா?
*உணர்ச்சி பூர்வமாய் இல்லாது அறிவு பூர்வமாய் எடுக்கப்பட்ட முடிவா இது?
*இந்த முடிவில் கெட்ட நோக்கம் உள்ளதா?
*இந்த முடிவில் உள் நோக்கம் உள்ளதா?
இந்தக் கேள்விகளுக்கு சாதகமான பதில் அமைந்தால் முடிவு பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும்.
|
|
நல்லதொரு ஆலோசனை!