Posted on :
Wednesday, July 04, 2012
| By :
ஜெயராஜன்
| In :
இலக்கிய சுவை
வெந்த கறி மணப்பதேன்?
வீரர் படை முறிவதேன்?
---பெருங்காயத்தால்.
கண்ணப்பன் திருந்தியதேன்?
கந்தன் படுத்துக் கிடப்பதேன்?
---கால் கட்டு போட்டதால்.
படம் அழகாய்த் தெரிவதேன்?
பண்டம் விலை குறைவதேன்?
----சட்டம் போட்டதால்.
குமரன் அடி வாங்குவதேன்?
குப்பியைத் தூக்கி எறிவதேன்?
----காலியானதால்.
|
|
Post a Comment