ஒரு குடிகாரன் ஒரு நாள் இரவு நன்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.அவன் தனியாக வாழ்ந்து வந்தான்.அதனால் வெளியே செல்லும்போது கதவைப் பூட்டிவிட்டுச் செல்வான்.அன்றும் வீட்டை நெருங்கியதும் சாவியை எடுத்து கதவைத் திறக்க முயற்சி செய்தான்.ஆனால் சாவியை சரியாக பூட்டு துவாரத்தில் அவனால் பொறுத்த முடியவில்லை.சரியான போதையில் இருந்ததால் அவனுக்கு நிதானம் இல்லாதிருந்ததால் பல முறை முயன்றும் அவனால் சாவியை துவாரத்தில் பொறுத்த இயலவில்லை.இதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் அவன் மீது அனுதாபப்பட்டு அவனிடம் வந்து,''சாவியைக் கொடுங்கள்.நான் திறந்து தருகிறேன்.''என்றார்.குடிகாரன் சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு,''பூட்டை நானே திறந்து கொள்கிறேன்.ஆனால் எனக்கு நீங்கள் ஒரே ஒரு உதவி செய்தால் போதும்.தயவுசெய்து வீட்டை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.நான் பூட்டைத் திறக்க முயலும்போதெல்லாம் இந்த வீடு தான் கடிகாரத்தின் பெண்டுலம் மாதிரி ஆடித் தொலைக்கிறது,''என்றானே பார்க்கலாம்!அவர் ஏன்தான் அங்கு வந்தோமோ என்று என்ன ஆரம்பித்துவிட்டார்.
|
|
Post a Comment