டாக்டருக்கு நடு ராத்திரியில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.பேசியவர் மிகவும் பதட்டத்தோடு சொன்னார்,''டாக்டர்,என் மனைவி வயிற்று வலியால் ரொம்பவும் துடிக்கிறாள்.நான், இது குடல் புண் நோயாய்த்தான் (appendicities) இருக்கும் என நினைக்கிறேன்.எனவே உடனே வாங்க,டாக்டர்,''டாக்டருக்கு இவர் ஏற்கனவே நன்கு தெரிந்தவர்தான். மேலும் அவர் குடும்பத்தில் அனைவருக்கும் சிகிச்சை செய்துள்ளார்.எனவே அவர்,''நான் உடனே புறப்பட்டு வருகிறேன்.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.ஏனெனில் நான் உங்கள் மனைவிக்கு குடல் புண் சம்பந்தமான அறுவை சிகிச்சை ஏற்கனவே செய்து எடுத்து விட்டேன்,'' என்றார்.இந்த ஆள் சொன்னார்,''ஐயோ டாக்டர், இப்போது எனக்கு வேறு ஒருத்தி அல்லவா மனைவியாய் இருக்கிறாள்.''
******
நீதிபதி:(குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்து)உன்னை எங்கோ பார்த்திருக்கிறேனே!
குற்றம் சாட்டப்பட்டவர்:நீங்கள் சொல்வது சரிதான் அய்யா,நான் உங்கள் மனைவிக்கு வயலின் சொல்லிக் கொடுத்தேன்.
நீதிபதி:அவனா நீ, சரி இந்த வழக்கில் உனக்கு இருபது ஆண்டு சிறை தண்டனை.
******
மனைவி:என்னிடம் நிறையப் பணம் இருக்கிறது என்பதற்காகத்தானே என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?
கணவன்:இல்லை அன்பே,என்னிடம் பணம் இல்லை என்பதனால்தான் உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன்.
******
புத்தகக் கடையில் ஒருவர்.கடைக்காரரிடம்,''என் பெண்ணுக்கு பயணம் போகும்போது படிக்க நல்ல புத்தகம் ஒன்று கொடுங்கள்.ஆனால் அதில் அரசியல்,சமூகப் பிரச்சினைகள்.பாலியல்,வன்முறை போன்றவை எதுவும் இருக்கக் கூடாது.''என்று கேட்டார்.கடைக்காரர் உடனே ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார்.வந்தவர்,''என்ன சார்,ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்?''என்று கேட்க,கடைக்காரர் சொன்னார்,''நீங்கள் கேட்டபடி இந்த ஒரு புத்தகம் தான் உள்ளது.''
******
|
|
Post a Comment