அண்ணல் நபிகள் தன் நண்பர் அபுபக்கருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு மனிதன் அண்ணலைப் பார்த்து கோபத்துடன் திட்ட ஆரம்பித்தான்.நபிநாயகம் அமைதியாக இருந்தார்.அபுபக்கரும் சிறிது நேரம் அமைதி காத்தார்.வந்தவன் அளவுக்கு அதிகமாகப் பேச,அபுபக்கர் வெகுண்டெழுந்தார்.உடனே அவ்விடத்தைவிட்டு நபிகள் எழுந்து வெளியே சென்று விட்டார்.சிறிது நேரம் கழித்து வந்த மனிதன் திட்டிக் கொண்டே வெளியே சென்று விட்டான்.பின்னர் அபுபக்கர் நபிகளைப் பார்த்தபோது மிகவும் வருத்தப்பட்டு,''அந்த சூழ்நிலையில் என்னை ஆதரிக்காது வெளியே சென்று விட்டீர்களே?''என்று கேட்டார்.அண்ணல் சொன்னார்,''முதலில் நீ அமைதியாக இருந்தபோது,நீ கடவுளிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறாய் என்று நினைத்தேன்.கடவுளும் அங்கு வந்திருந்ததை உணர்ந்தேன்.ஆனால் சிறிது நேரத்தில் நீ கோபப்பட்டே.அப்போது உனக்குக் கடவுளின் உதவி தேவையில்லை என்றும் பிரச்சினையை நீயே தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டாய் என்பதனையும் உணர்ந்தேன்.அப்போது கடவுளும் வெளியே சென்று விட்டார். கடவுள் இல்லாத இடத்தில் எனக்கு என்ன வேலை? அதனால்தான் நானும் வெளியே சென்று விட்டேன்.''
|
|
Post a Comment