உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பூகம்பம்.

0

Posted on : Friday, July 13, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் ஒரு பெரிய மனிதருக்கு ஐந்து வயதில் ஒரு பையன் இருந்தான்.அவன் மிகப் பெரிய குறும்பன் அவன் செய்யும் சேட்டைகளுக்கு அளவேயில்லை.ஆனாலும் ஒரே பையன் என்பதால் பெரியவருக்கு அவன் மீது மிகுந்த அன்பு.அந்த ஊரில் பூகம்பம் சில நாட்களுக்குள்  வரும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வந்தது.உடனே பெரியவர் பையனை அழைத்துக் கொண்டுபோய் வெகு தூரத்தில் இருந்த தன் நண்பனிடம் கொண்டு போய் சேர்த்து,''பூகம்பப் பிரச்சினை முடியும் வரை ஒரு பத்து நாட்களுக்கு என் மகன் உன் பாதுகாப்பில் இருக்கட்டும்,''என்று கேட்டுக் கொண்டான்.நண்பனும்,''இந்த உதவி கூட செய்ய மாட்டேனா?''என்று சொல்லியவாறே அநதப் பையனைத் தன் அருகில் வைத்துக் கொண்டார் .பெரியவரும் ஊர் வந்து சேர்ந்தார்.மறுநாளே நண்பரிடமிருந்து பையனைத் திரும்ப அழைத்துப் போகுமாறு தந்தி வந்தது.தொலைபேசியில் நண்பரைத் தொடர்பு கொண்டபோது அவர் அலறிக்கொண்டே சொன்னார்,''நண்பா,உங்கள் ஊருக்கு வரும் பூகம்பத்தைக் கூட இங்கு அனுப்பிவிடு,பரவாயில்லை.ஆனால் உன் மகனை உடனே அழைத்துச்செல்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment