கருமி ஒருவன் இருந்தான் அவனது கஞ்சத் தனத்தால் அவனுடைய மனைவியும் பையனும் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார்கள்.ஒருநாள் பையன் முடி அதிகம் வளர்ந்து விட்டது என்று சொல்லி முடி வெட்டக் காசு கேட்டான்.அதற்கு அவன்,''போ,போ,காசு இங்கே காய்த்தா தொங்குகிறது?'' என்று கூறி காசு தர மறுத்து விட்டான்.வருத்தம் அடைந்த சிறுவன்,மறுநாள் முடி வெட்டாமல் போனால் நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று எண்ணியவாறு அவர்களது தோட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் கீழே விழுந்தது.அவனுக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது.உடனே அந்த தேங்காயை எடுத்துக் கொண்டுபோய் முடி திருத்துபவரிடம் கொடுத்து,தேங்காயைப் பெற்றுக் கொண்டு முடி வெட்டுமாறு கேட்டுக் கொண்டான்.பையனின் தகப்பனின் கருமித்தனத்தை அறிந்த முடி திருத்துபவரும் அனுதாபப்பட்டு தேங்காயைப் பெற்றுக் கொண்டு அவனுக்கு முடி வெட்டி விட்டார்.முடி வெட்டியிருந்த பையனைக் கண்ட தந்தை அதிர்ந்தார்.ஆத்திரத்துடன் பணம் ஏது என்று கேட்க பையனும் உண்மையை சொல்லிவிட்டான்.நீண்ட நேரம் கவலையுடன் அமர்ந்திருந்த கருமி எழுந்து பையனிடம் சொன்னான்,''நான் சிரமப்பட்டு பணம் சேர்க்கிறேன்.நீங்கள் எல்லாம் ஊதாரித்தனமாய் செலவு செய்கிறீர்கள்.நான் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும்.இன்று முதல் நானும் ஊதாரியாய் இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.''பின் தனது அறைக்கு சென்று ஒரு பெட்டியிலிருந்து ஒரு பட்டு வேஷ்டியை எடுத்தான்.மகனிடம் சொன்னான்,''இது என் கல்யாணத்திற்கு என் மாமனார் கொடுத்தது.இதை கடந்த 15 ஆண்டுகளாக நான் உபயோகிக்காமல் பாதுகாத்து வந்தேன் .இன்று முதல் அதை உடுத்துவது என்று முடிவு செய்து விட்டேன்.''
|
|
அருமை! பகிர்வுக்கு நன்றி!
நல்ல முடிவு...