முல்லாவுக்கு சில நாட்களாக சுத்தமாக தூக்கமே வருவதில்லை.அவரும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்.தூக்க மாத்திரை கூடப் போட்டுப் பார்த்து விட்டார்.ஒன்றும் பயனில்லை.அவர் மகனுக்கு கவலையாகி விட்டது.அவன் தனது நண்பராகிய மனோவசிய மருத்துவரை அழைத்து வந்தான்.அவர் உறுதியாக சரி செய்து விடலாம் என்று கூறினார்.பின் முல்லாவை அவருடைய படுக்கையில் படுக்க செய்து தனது மனோ வசிய மருத்துவத்தை ஆரம்பித்தார்.''நீங்கள் இப்பொழுது உறங்கப் போகிறீர்கள்''என்று திரும்பத் திரும்ப முல்லாவின் கண்களைப் பார்த்துச் சொன்னார்.பின் ஒளியின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே,அதே சமயம் அவருடைய குரலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வந்தார்.சிறிது நேரத்தில் முல்லாவிடமிருந்து குறட்டை ஒலி வந்தது.அவர் மகனுக்கு மிகுந்த திருப்தி.மருத்துவருக்கு நிறையப் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு தந்தையின் படுக்கை அறைக்கு மறுபடியும் வந்தான்.முல்லா சிறிது கண்ணைத் திறந்து பார்த்துப் பின் மகனிடம்,''அந்த டாக்டர் ஒழிந்தானா? .சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி மிகவும் அறுத்து விட்டான்.அவன் எப்போதடா தொலைவான் என்று பார்த்தேன்.அவன் நகர்வதாய்த் தெரியவில்லை.எனவே நான் குறட்டை விடுவதுபோல நடித்தேன்.''என்றாரே பார்க்கலாம்,மகன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.
|
|
ஹா... ஹா... கலக்கல்...
தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு நன்றி.