ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார்.அவர் பெயர்,'நம்ப முடியவில்லை'.அவர் தனது மனைவியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.அவர் வயதாகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் தன் மனைவியிடம் சொன்னார்''அந்தக் காலத்தில் என்ன காரணத்தினாலோ எனக்கு இப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள்.இந்தப் பெயர் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.ஆனால் இதுவரை அதைத் தவிர்க்க முடியவில்லை.இறந்த பின்னாவது என் கல்லறையில் நான் வெறுக்கும் இந்தப் பெயரை எழுதாது வேறு ஏதாவது என்னைப் பற்றி எழுத ஏற்பாடு செய்,''அதேபோல அவர் இறந்ததும்,அவரது கல்லறையில் ,''தன் மனைவியிடம் கடைசி வரை விசுவாசமாக இருந்த அற்புதமான மனிதர்''என்று அவரது மனைவி எழுத வைத்தாள் .ஆனால் அந்தோ பரிதாபம்!அதன்பின் அந்தப் பக்கம் போவோர்,வருவோர் எல்லாம் அதைப் படித்துவிட்டு ''நம்ப முடியவில்லை''என்று சொல்லிச் சென்றார்கள்.
********
ஒரு பெண் தனது தோழியிடம் சொன்னாள் ,''என் கணவர் என்னை எப்போதும் பைத்தியமாய் காதலிக்கிறார்,''தோழி கேட்டாள் ,''அவர் எப்போதாவது புத்தி சுவாதீனமாய் இருப்பாரா ?''
********
|
|
நல்ல கேள்வி...!!!
நல்ல கதையா இருக்கே!
எல்லாமுமே புதியதாகவே தருகிறீர்கள்...
தொடர்ந்தும் தாருங்கள்