'போர்க்காலக் கதாநாயகன்'என்று பெயர் பெற்றவர் வின்ஸ்டன் சர்ச்சில். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கும் அவரது மருமகனுக்கும் கொஞ்சமும் ஒத்துப் போவதில்லை.ஒரு நாள் சர்ச்சிலின் நண்பர் அவரிடம் கேட்டார்,''போர் முடிவில் யார் அதிகம் பிரபலம் அடைவார்கள் ?''மருமகனைப் பற்றிய ஏதோ வெறுப்பில் இருந்த அவர்,''முசொலினி தான் பிரபலம் அடைவார் ,'' என்றார்.நண்பருக்கு அவர் பதிலினால் வியப்பு ஏற்பட்டது. அவருடைய பதிலுக்கான காரணத்தைக் கேட்டார்.சர்ச்சில் வெறுப்புடனேயே சொன்னார்,''முசொலினிக்குதான் தன்னுடைய மருமகனை சுடக் கூடிய தைரியம் இருந்தது.''நண்பர் சொல்லாமல் கொள்ளாமல் அவ்விடத்திலிருந்து அகன்றார்.
********
ஒரு நிருபர் பேரறிஞர் பெர்னாட்ஷாவிடம் கேட்டார்,''பெரிய அறிஞர்களுக்கெல்லாம் ஞாபக மறதி அதிகம் என்று நீங்கள் ஒரு முறை கூறி இருக்கிறீர்கள் அல்லவா?''ஷா அமைதியாக சொன்னார்,''எனக்கு ஞாபகம் இல்லையே!''
********
|
|
ஹா.. ஹா... நன்றி சார்...
நல்ல பகிர்வு! நன்றி!