மேரி கோரல்லி என்று ஒரு ஆங்கில நாவல் ஆசிரியை இருந்தார்.அவர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.அவருடைய சினேகிதி ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.அதற்கு அவர் சொன்னார்,''நான் செல்லமாக ஒரு நாய்,கிளி,பூனை வளர்க்கின்றேன்.அவை என்னிடம் அன்பாக இருக்கின்றன.ஒரு நாய் வளர்க்கிறேன்.அது நாள் முழுவதும் குரைக்கிறது.கிளி ஒன்று வளர்க்கிறேன்.அது பகல் முழுவதும் திட்டுகிறது.பூனை ஒன்று வளர்க்கிறேன்.அது இரவு முழுவதும் வெளியே போய் விடுகிறது.இப்படி ஒரு கணவன் பல்வேறு தருணங்களில் செய்யக் கூடிய காரியங்களை இவை செய்து விடுகின்றன.பின் எதற்காக நான் மணம் செய்து கொள்ள வேண்டும்?''
********
ஒரு கூட்டத்தில் கல்கி பேசினார்.அவருக்கு முன் கிருஷ்ணசாமி அய்யரும்,டி .கே.சி.யும் பேசி முடித்திருந்தனர். கிருஷ்ணசாமி அய்யர் திருப்புகழை நன்கு படித்தவர்.டி.கே.சி.'ரசிகமணி' என்று அழைக்கப் பட்டவர்.கல்கி,''மேடையில் இந்தப் பக்கம் திருப்புகழ் மணி.மறுபக்கம் ரசிகமணி.இடையில் நின்று பேசும் நானோ ஒரு பெண்மணி கூட இல்லையே!'' என்றதும் ஒரே கைதட்டல்.
********
|
|
ஹா... ஹா... ரசித்தேன்... சிரித்தேன்...
ரசிக்கக் கூடிய பகிர்வு
நல்ல பகிர்வு.
அன்பு நண்பரே தங்கள் பதிவை நன்றியுடன் வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html
நன்றி.