முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் ஒரு சிறந்த பேச்சாளர். இலக்கியவாதியும் கூட.அவருடைய சேவையைப்ப் பாராட்டி ஒரு பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்கள்.ஏற்புரை கூற வந்த அவர் ''ஆண்களுக்கு சமமாக பெண்களை முன்னேற்ற செய்ய வேண்டும் என்று பாடு பட்டு வந்தோம்.ஆனால் இப்போது பெண்களுக்கு சமமாக ஆண்களை முன்னேற்ற வேண்டிய நிலை வந்து விட்டது,''என்று கூறி பேச்சை சில நொடிகள் நிறுத்தினார்.எல்லோரும் ஆவலுடன் அவரை நோக்க அவர் தொடர்ந்தார்,''உதாரணத்துக்கு என் மனைவியை சொல்லலாம்.அவர் 25 ஆண்டுகளுக்கும் முன்னரே டாக்டராகி விட்டார்.நான் இப்போதுதான் டாக்டராகியுள்ளேன்.''(அவரது மனைவியின் பெயர் டாக்டர் விசாலாக்ஷி நெடுஞ்செழியன்.)
********
ஜின் காக்டு என்பவர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்.அவரிடம் ஒரு நண்பர்,''உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உண்டா?''என்று கேட்டார்.அதற்கு அவர் சொன்னார்,''உறுதியாக நம்புகிறேன்.எனக்கு பிடிக்காதவர்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?''
********
|
|
nalla pakirvu!
nantri!
நல்ல நல்ல தகவல்கள்! நன்றி!
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி...
sir i am up loading some pathivugam from your blog to my face book ...sir if any objection i wiil stop it..any how please give me permission to use them... p.gnanamoorthy ponnaier from dindigul