ஒரு புத்திசாலியான பெரியவர்.அவர் ஏதோ தவறு செய்து விட்டார்.விசாரணை நடைபெற்றது.தீர்ப்பு அவருக்கு சாதகமாக இல்லை.நீதிபதி அவரைப் பார்த்து,''கடைசியாக நீர் சொல்ல விரும்புவதை சொல்லலாம்.ஆனால் ஒரு விஷயம்.நீர் உண்மை சொன்னால் உம்மைத் தூக்கில் போடுவோம்.பொய் சொன்னால் உமது தலை வெட்டப்படும்.''என்று சொன்னார்.பெரியவர் சொன்னார்,''எனது தலை வெட்டப்படட்டும்.''இதைக் கேட்டதும் நீதிபதி குழப்பமடைந்து தீர்ப்பைத் தள்ளி வைத்தார்.ஏன்?
பெரியவரின் தலையை வெட்டினால் அவர் குற்றம் செய்தது உண்மை என்றாகும்.அது உண்மை என்று ஆனால் அவரைத் தூக்கில் போட வேண்டும்.சரி, அவரைத் தூக்கில் போடலாம் என்றால் அப்போது அவர் சொன்னது பொய் என்றாகிவிடும்.அப்படிஎன்றால் அவர் தலை வெட்டப்பட்டிருக்க வேண்டும்.நீதிபதியால் என்ன செய்ய முடியும்?
|
|
Post a Comment