அறிஞர் கி.வா ஜ.க்கு ஒரு நண்பர் விருந்து கொடுத்தார்.விருந்தில் பரிமாறப்பட்ட அனைத்து உணவு வகைகளும் மிகவும் சுவையாக இருந்தன.அவருக்கு எதையும் விட மனதில்லை .ஆனால் அதே சமயம் வயிறு நிரம்பி விட்டது .ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்தார்.நண்பர்,''சாப்பாடு எப்படி இருந்தது?ஏதாவது குறைபாடு உண்டா?''என்று கேட்டார். கி.வா.ஜ.சொன்னார்,''எல்லாம் சரி;இன்னும் ஒன்று செய்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்.''நண்பர் அதிர்ச்சி அடைந்தார்.பார்த்துப் பார்த்து செய்தும் ஏதோ குறை இருந்திருக்கிறதோ என்று எண்ணி அவரிடம் பதட்டத்துடன்,''என்ன இல்லை?என்ன செய்திருக்க வேண்டும்?தயவு செய்து சொல்லுங்கள்,''என்று வேண்டிக் கேட்டார்.கி.வா.ஜ.சிரித்துக் கொண்டே,''ஒன்றும் பெரிதாக இல்லை.எனக்கு இன்னும் ஒரு வயிறு செய்து கொடுத்திருந்தால் இன்னும் ஒரு பங்கு சாப்பிட்டிருப்பேனே!'' என்றார்.நண்பரின் முகத்தில் இப்போது மிகுந்த மகிழ்ச்சி.
|
|
Post a Comment