முல்லா ஒரு நாள் ஒரு ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டார்.கிட்டத்தட்ட மூழ்கும் நிலை வந்து விட்டது.அவருக்கு பெரிதாகக் கடவுள் பக்தி ஒன்றும் கிடையாது.ஆனாலும் உயிர் போகும் அபாய நிலையிலவர்,''கடவுளே,என்னைக் காப்பாற்று.இனி அனுதினமும் உன்னை வணங்குவேன்,''என்று உருக ஆரம்பித்தார்.அப்போது அவர் எதிர்பாராத வகையில் ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தின் நீண்ட கிளை ஒன்று நீரை ஒட்டி தாழ இருந்ததைக் கண்டு கையால் அதைப் பற்றிக் கிளையில் ஏறிக் கொண்டார்.மெதுவாகக் கிளையில் கொஞ்சம்கொஞ்சமாக நகர்ந்தார்.கிளையில் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்த வுடன் அவர் கடவுளிடம்,''இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன்என்னைப் பற்றி நீ கவலைப் பட வேண்டாம்,''என்றார்.அப்போது அவர் அமர்ந்திருந்த கிளை முறிந்து மீண்டும் அவர் ஆற்றில் விழுந்தார்.அப்போது முல்லா உரக்க,''கடவுளே! என்னுடைய சின்ன ஜோக்கைக் கூட உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?"'என்று கூவினார்.
|
|
Post a Comment