ஒரு நாள் காலை முல்லாவின் மனைவி மிகுந்த கோபத்துடன் முல்லாவிடம் வந்தார்.''நேற்று நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசினீர்கள் இழிவு படுத்தினீர்கள்.என்னை என்னவெல்லாமோ பண்ணுவேன் என்று மிரட்டினீர்கள்.எனக்கு இதன் காரணம் தெரிய வேண்டும்.நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்,''என்று ஆவேசமாகக் கத்தினாள்.படுத்திருந்த முல்லா அவள் நின்ற நிலைக்கு எதிர்ப்புறம் திரும்பிப் படுத்தக் கொண்டே,''நேற்று நான் தூங்கியதாக யார் சொன்னது?.உன்னிடம் சொல்ல வேண்டிய சில விசயங்களை பகலில் பேச எனக்கு தைரியம் கிடையாது.அதனால்தான் இப்படி!''என்றார்.அடுத்து நடந்ததை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!
|
|
Post a Comment