ஒன்றை ஏற்றல்(response) என்பது அனுபவ உணர்வு.ஏற்றலுக்கும் எதிர் விளைவுக்கும்(reaction) இடையே பெரிய வேறுபாடு உண்டு.ஒருவர் நம்மைத் திட்டினால்,பதிலுக்கு அவரைத் திட்ட வேண்டும் என்ற விருப்பம் நமக்குள் எப்போதும் இருக்கும்.ஆனால் அதை எதிர்க்காமல் ஏற்கும்போது அது வேறு விதமாக அமையும்.ஒருவர் நம்மைத் திட்டும்போது,''பாவம்,இவர் இவ்வாறு திட்ட என்ன காரணமோ எனக்குத் தெரியவில்லையே,''என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் அது ஏற்பு.அவர் திட்டியதற்கு நாம் செயல்படவில்லை.உணர்வுபூர்ணமான நேர்விளைவு இது.பட்டனைத் தட்டியவுடன் மின்விசிறி சுழல ஆரம்பிக்கிறது.சுற்றலாமா வேண்டாமா என்று யோசிப்பதில்லை.மறுபடியும் அழுத்தினால் மின்விசிறி நிற்கிறது.அது போலவே நாம் திட்டப்படும்போது-பட்டன் அழுத்தப் படுகிறது.-உடனே கோபம் வருகிறது.ஒருவர் நம்மைப் பாராட்டுகிறார்-பட்டன் அழுத்தப் படுகிறது.-கோபம் நீங்குகிறது.ஆகவே நாம் ஒரு தனி மனிதனா அல்லது இயந்திரமா?நம் நடத்தை இயந்திரத்தனமாய் இருக்கிறது.ஏற்பு என்பது உணர்வின் அடையாளம்.சிலுவையில் அறையப்படும்போது இயேசு ,''கர்த்தரே,இவர்கள் தாம் செய்வது என்னவென அறியாதவர்கள்.இவர்களை மன்னியும்.''என்றார் .இது உணர்வுப் பூர்வமான பதில்.இதுதான் ஏற்பு.
|
|
Post a Comment