இறந்தவுடன் நரகத்திற்குக் கொண்டு வரப்பட்டான் ஒரு பணக்காரன். அவன் கணக்கைப் பார்த்துவிட்டு,சித்திரகுப்தன் ''இவன் பூமியில் எந்தவித தர்மமும் செய்யவில்லை.எனவே இவனைக் கொதிக்கும் எண்ணெயில் தூக்கிப் போடுங்கள் என்று ஆணையிட்டான்.அந்த வியாபாரி ஆவேசத்துடன், ''ஐயோ,என் வாழ்நாள் முழுவதும் என் பணம் முழுவதையும் தர்மத்திற்குத்தானே செலவு செய்தேன்!என்னை இப்படி வதைக்கிறீர்களே?''என்று கத்தினான்.சித்திரகுப்தனுக்கு வந்தது குழப்பம்.அந்த பணக்காரனின் கணக்கை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு,''என்ன விளையாடுகிறாயா?நீ யாருக்கும் ஒரு பைசா கூட தர்மம் கொடுக்கவில்லை. என் கணக்கில் பிழையே ஏற்படாதே!ஒழுங்காய் உண்மையைக் கூறு. இல்லையெனில் இன்னும் கூடுதலாக தண்டனை கொடுப்பேன்,''என்றார். பணக்காரனும் அப்பாவியாக சொன்னான்,''அய்யா,என் மனைவி தர்மம் என்ற தர்மாம்பாளுக்குதான் நான் என் பணம் முழுவதையும் செலவழித்தேன் .நான் சொல்வது உண்மை.''சித்திரகுப்தன் கோபத்தில் பல்லை நறநறவென்று கடித்தார்.
|
|
அது சரி....! ஹா... ஹா...