ஆசிரியர்:நீங்கள் எல்லாம் வைரம் மாதிரி.
மாணவன்:அப்படின்னா,நீங்களும் வைரம் தான் சார்.
ஆசிரியர்:எப்படி?
மாணவன்:வைரத்தை வைரத்தால்தானே சார் அறுக்க முடியும்?
********
ராமு:ஆசிரியர்கள் ஏணி மாதிரின்னு சொல்றாங்கள்ள ,அது ரொம்ப சரி.
சோமு:அது எப்படி?
ராமு:எப்பவும் படி,படின்னு சொல்றாங்கள்ள !
********
ஆசிரியர்:செய்முறை வகுப்பிற்கும்,பாடம் நடத்தப்படும் வகுப்பிற்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:செய்முறை வகுப்பில் நாங்கள் அறுப்போம்:மற்றதில் நீங்கள் அறுப்பீர்கள்.
********
ஆசிரியர்:ஏசுவுக்கும் காந்திக்கும் என்ன ஒற்றுமை?
மாணவன்:இரண்டு பேருமே விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள்,சார்.
********
மாணவனின் தந்தை:என் மகன் கணக்கிலே புலியாய் இருப்பானே!
ஆசிரியர்:நீங்க வேறே,அவனுக்கு ஐந்தும் நான்கும் கூட்டினால் என்ன விடை என்பதே தெரியவில்லை.
தந்தை:நீங்கள் வேண்டுமானால் ஒரு புலியிடம் இதே கணக்கைப் போட்டுப் பாருங்கள்!அதுவும் பதில் தெரியாமல் முழிக்கத்தான் செய்யும்.
********
ராமு:நான் தேர்வு எழுதக் கிளம்பும்போதெல்லாம் எங்க அப்பா வாசல் படி வரைக்கும் வந்து விடை கொடுத்து அனுப்புவார் தெரியுமா?
சோமு:எங்கப்பா விடையெல்லாம் கொடுத்து அனுப்ப மாட்டார்.தெரிஞ்ச வரைக்கும் எழுதினால் போதும் என்பார்.
********
|
|
நல்லாவே சிரிக்க வைச்சிட்டீங்க சார்...
நன்றி...