நம் தோலில் பாதம்,உள்ளங்கை முதலிய இடங்களில் தொடு உணர்வு செல்கள் அதிகம் உள்ளன.இவை தம் மேற்போர்வையை இழந்து காணப்படுவதால் குறைந்த பட்ச உணர்வுத் தூண்டுதல்களையும் துல்லியமாகக் கடத்தும் திறன் பெற்றிருக்கின்றன.எனவே இந்தத் தொடு செல்கள் மிகுந்த பாதம் முதலிய பாகங்களை லேசாக வருடினால்கூடக் கூச்சம் ஏற்படுகிறது.
**********
நமக்கு சளி பிடிக்கும்போது மூக்கிலுள்ள mucus membrane வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்படும்.அந்த வைரஸ் கிருமிகளை அழிக்க mucus membrane நிறையத் தண்ணீரை நமது இரத்தம் மற்றும் வெள்ளை அனுக்களிடம் இருந்து உற்பத்தி செய்யும்.இந்தத் தண்ணீர் வைரஸ் கிருமிகளைத் தாக்கும்.இதனால்தான் நமக்கு சளி பிடித்தால் மூக்கில் தண்ணீராய் வடிகிறது.
**********
புரோட்டின் என்பது கார்பன்,ஹைட்ரஜன் ,நைட்ரஜன்,ஆக்சிஜன்,சல்பர் ஆகியவற்றின் கலவையாகும்.இந்த வார்த்தை கிரேக்கத்திலிருந்து வந்தது.அதன் பொருள் அடிப்படை .
**********
|
|
Post a Comment