புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் ஒரு அரண்மனைக்கு சென்று உபதேசங்கள் புரியலானார்.அரண்மனையில் வேலை செய்தவர்கள் அவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர்,''அய்யா,நீங்கள் முற்றும் துறந்த
முனிவர்.தவசீலர்களான உங்களுடைய சீடர்களுக்கு உங்கள் உபதேசங்களைப் பின்பற்றுவது எளிது.இல்லறத்தில் முழுமையாக ஈடுபட்டு வரும் எங்களுக்கு அது எளிதாக இல்லை.எங்கள் தகுதிக்கேற்ப எளிதான உபதேசங்களைக் காட்டுங்கள்.''புத்தர் அதை ஏற்றுக் கொண்டு உபதேசித்தார்,''நாம் நம் செயல்களுக்கு மனதையும் உடலையும் பயன்படுத்துகிறோம்.இரண்டும் ஒருவருக்கு ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர் நலமுடன் இருக்கிறார் என்று பொருள்.நாம் நமது உடலை அசைத்துப் பயன்படுத்தும்போது உடல் பலம் பெறுகிறது.ஆரோக்கியம் பெறுகிறது.ஆனால் அசைவற்றிருக்கும்போதுதான் நமது மனம் பலம் பெறுகிறது.எனவே உடலை அசைத்தும்,மனதை அசைவற்றும் வைத்திருந்தால் உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.''
|
|
Post a Comment