இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.ஜெர்மன் உளவாளி ஒருவனை எதிரிகள் பார்த்து விட்டனர்.உடனே அவனைப் பிடிக்க விரைந்தனர்.எதிரிகளின் கைகளில் சிக்கி விடக்கூடாது என்று எண்ணிய உளவாளி மிக வேகமாக ஓடத் துவங்கினான்.
எதிரிகளும் பின் தொடர்ந்தனர்.ஓடிக் கொண்டிருந்த உளவாளி வழியில்
சாலை ஓரமாய் ஒரு சைக்கிள் கிடப்பதைப் பார்த்தான்.மிகுந்த மகிழ்ச்சியுடன்
அதில் ஏறி சைக்கிளை விரைவாக செலுத்தினான்.நீண்ட நேரத்திற்குப்
பின் திரும்பிப் பார்த்தபோது யாரும் பின் தொடரவில்லை என்பது
உறுதியாகத் தெரிந்தது.மெதுவாக சைக்கிளை விட்டு இறங்கினான்.
மெதுவாக யோசித்துக் கொண்டே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்தான்.
அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது.அவனுக்கு சிறு வயது முதலே சைக்கிள் ஓட்ட வராது.இப்போது எப்படி இவ்வளவு தூரம்
அனாயசமாக சைக்கிள் ஓட்ட முடிந்தது என்பதை நினைத்து வியந்தான்.
எப்படியோ இனி சைக்கிள் ஓட்டுவது எளிதுதான் என்று நினைத்தான்.
அதை சோதித்துப் பார்க்க மறுபடியும் சைக்கிளில் ஏற முயன்றான்.
அந்தோ!அவனால் இப்போது சைக்கிளில் ஏறக் கூட முடியவில்லை.
பல முறை முயற்சித்தும் முடியவே இல்லை.எப்படியோ எதிரிகளிடம்
இருந்து தப்பி வந்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே.
ஆபத்துக் காலத்தில் நமக்குள் ஒரு அதிசயமான சக்தி வந்து விடுகிறது என்பதையே இந்நிகழ்ச்சி தெளிவுறுத்துகிறது.
|
|
Post a Comment