உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உபதேசம்

0

Posted on : Saturday, March 10, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் காலை நேரம்.புத்தர் உபதேசம் செய்ய வரும் நேரம்.கூட்டம் அலை மோதியது.புத்தர் வந்தார்.உடனே எங்கும் அமைதி.எல்லோருக்கும் புத்தரின் உபதேசங்களைக் கேட்க ஆவல்.நீண்ட தூரத்திலிருந்து அவர்கள் வந்திருந்தனர்.புத்தர் வந்து அமர்ந்தார்.கூட்டம் நடக்குமிடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது.புத்தர் உபதேசத்தை ஆரம்பிக்க இருந்த தருணத்தில் மரத்திலிருந்த ஒரு பறவை கீச்சிட ஆரம்பித்தது.அதன் குரல் மிக இனிமையாக இருந்தது.அந்த அமைதியான சூழலில் அந்தப் பறவையின் குரல் ரம்மியமாக இருந்தது.புத்தர் அந்தப் பறவையின் இனிய குரல் கேட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.அவர் தன் பேச்சை ஆரம்பிக்கவில்லை.சிறிது நரத்தில் அப்பறவை அங்கிருந்து பறந்து சென்று விட்டது.எல்லோரும் புத்தரின் பேச்சைக் கேட்கத் தயாரானபோது புத்தர் சொன்னார்,''இன்றைய மிகச்சிறந்த  உபதேசம் முடிந்துவிட்டது.அனைவரும் செல்லலாம்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment