சுபி ஞானி ரபியாவிடம் ஒருவர் கேட்டார்,''உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன?''ரபியா சொன்னார்,''நான்கு அங்குலம்?''கேட்டவர்க்கு இந்த விசித்திரமான பதிலின் பொருள் தெரியாதை அறிந்து அவரே சொன்னார்,''காதுக்கும்,கண்ணிற்கும் உள்ள இந்த இடைவெளிதான் பொய்க்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசம் .ஏனெனில் காதால் கேட்பது பொய்.கண்ணால் பார்ப்பதுதான் மெய்.''
இந்த விசயத்தில் நமது வள்ளுவர் இன்னும் தெளிவான கருத்தைக் கூறியுள்ளார்.அதாவது,கண்ணால் பார்ப்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய்.தீர விசாரித்து அறிவதே மெய்.
|
|
Post a Comment