உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

டாக்டர்!டாக்டர்!!

1

Posted on : Tuesday, March 08, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கண் டாக்டர்,புதிதாக வேலையில் சேர்ந்த தன உதவியாளரிடம் கூறினார்,''இங்கு கண் சிகிச்சைக்கு வருபவர்களிடம் எவ்வாறு கட்டணம் வசூலிப்பது என்பதை முதலில் உனக்கு சொல்லித்தருகிறேன்.நான் எழுதிக் கொடுத்துள்ளபடி கண்ணாடியை தயார் செய்து,கண்ணாடியை மாட்டும்போது ,அவர் இதற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்பார்.உடனே 750 ரூபாய் என்று சொல்.அவர் கண்ணை அப்போது பார்.அவர் கண்கள் படபடக்காமல் சாதாரணமாக இருந்தால்,அது கண்ணாடி பிரேமுக்கு மட்டும் என்றும்,லென்சுக்கு தனியே 500 ரூபாய் ஆகும் என்று சொல்.அப்போதும் அவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றால் அந்த விலை ஒரு லென்சுக்கு என்று சொல்.''
**********
ஆப்பரேசனுக்குப்பின் மயக்கம் தெளிந்து எழுந்த நோயாளியிடம் டாக்டர் வந்து மெதுவாக சொன்னார்,''ஒரு தவறு நடந்து விட்டது ஆப்பரேசனின்போது எனது கை உறையை உள்ளேயே வைத்து தைத்து விட்டேன்.அதை எடுக்க மீண்டும் ஒரு ஆப்பரேசன் செய்ய வேண்டியிருக்கிறது.''உடனே நோயாளி அலறி அடித்துக்கொண்டு சொன்னார்,''ஐயையோ.என்னை ஆளை விடுங்கள்.உங்கள் கை உறைக்கு உரிய பணத்தையும் நான் கட்டி விடுகிறேன்.''
**********
அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் ஒருவரின் வீட்டில் தண்ணீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது உடனே பிளம்பர் ஒருவர் வந்து அதை சரி செய்தார்.கூலி எவ்வளவு என்று டாக்டர் கேட்க,பிளம்பர்  ஆயிரம் ரூபாய் என்றார்.அதிர்ந்து போன டாக்டர்,''அடேயப்பா,நான் கூட ஒரு ஆபரேசனுக்கு அவ்வளவு பணம் வாங்குவதில்லையே!''என்றார்.பிளம்பர் சாவகாசமாக சொன்னார்,''நான் கூட அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது அவ்வளவு பணம் கிடைக்கவில்லை அதனால்தான் பிளம்பராகிவிட்டேன்.''
**********
உடல் நலமில்லை என்று ஒருவர் ஒரு டாக்டரிடம் சொன்னார்.அவரை நன்கு பரிசோதித்தபின் டாக்டர் மூன்று  நிறங்களில் மாத்திரைகளைக் கொடுத்து சொன்னார்,''காலை உணவுக்குப்பின் சிவப்பு மாத்திரையை சாப்பிட்டுவிட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.மதிய உணவுக்குப்பின் மஞ்சள் நிற மாத்திரையை சாப்பிட்டு விட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.இரவு படுக்குமுன் பச்சை நிற மாத்திரையை சாப்பிட்டு விட்டு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.''''எனக்கு என்ன வியாதி,டாக்டர்?''என்று நோயாளி கேட்டார்.டாக்டர் சொன்னார்,''நீ தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பதில்லை.''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

good jokes.

Post a Comment