வேலைக்குப் போகும் மனைவி,அன்று வீடு திரும்ப இரவில் தாமதமாகி விட்டது மெதுவாகக் கதவைத் திறந்து,கணவன் தூங்கிக் கொண்டிருந்தால், அவரைத் தொந்தரவு செய்யாது தானும் கட்டிலில் படுத்து உறங்கலாம் என்று எண்ணி,மெதுவாக படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.ஒரு அதிர்ச்சி!கட்டிலில் போர்வையை முகம் வரை மூடி இரண்டு பேர் படுத்திருப்பது தேர்ந்தது.உடனே அவளுக்கு வந்ததே ஆத்திரம்.பக்கத்தில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து அந்த இருவரையும் பலமாக நான்கு அடி அடித்துவிட்டு,கோபமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.அப்போதுதான் அடுத்த அறையில் விளக்கு எறிவது தெரிந்தது.அங்கு சென்று பார்த்தால்,கணவன் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான்.அவளைப் பார்த்தவுடன் கணவன் சொன்னான்,''இன்று மாலை ஊரிலிருந்து உன் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள்.மிகக் களைப்பாய் தென்பட்டதால் நான்தான் அவர்களை நம் படுக்கை அறையில் ஓய்வு எடுக்க சொன்னேன்.நாம் இன்று ஒரு நாள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.''.
|
|
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!