ருமேனியாவை ஆண்ட ஒரு மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.தலைமறைவாக இருந்த அவர் இங்கிலாந்து,மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகளை சந்தித்து ''நான் இங்கிலாந்துக்கு பத்து இளைஞர்களையும்,அமெரிக்காவுக்கு பத்து இளைஞர்களையும் அனுப்பி வைக்கிறேன்.அவர்களுக்கு அரசாங்க நிர்வாகப் பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து எங்கள் நாட்டுக்கு திரும்ப அனுப்பி வையுங்கள்.நான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்போது அவர்கள் எனக்கு உபயோகமாயிருப்பார்கள்.''என்று கேட்டுக் கொண்டார்.அதேபோல இளைஞர்களும் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.சில மாதங்கள் கழித்து பயிற்சி முடிந்தது.மன்னரும் ஆட்சியைப் பிடித்தார்.மன்னரின் நண்பர் கேட்டார், ''பயிற்சி பெற்ற இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?''மன்னர் சொன்னார்,''இங்கிலாந்தில் தேர்ச்சி பெற்ற பத்து பேரும் புத்திசாலிகளாக இருப்பதால் அவர்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி விட்டேன்.'' நண்பர்,''அமெரிக்க போனவர்கள் எப்படி?''என்று கேட்க மன்னர் அமைதியாக,''அவர்கள் அதி புத்திசாலிகள்!அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்கள்.''என்றார்.
|
|
ஹா... ஹா... அதி புத்திசாலிகள்...!
haaa haaa