அந்தரே என்பவர் இலங்கை மன்னரின் சபையில் இருந்த விகடகவி.அவர் சிறுவனாயிருக்கும்போது வீட்டிற்கு அருகில் ஒரு கிழவியிடம் அப்பங்கள் வாங்கி வருவார்.கிழவி ஒரு நாள் அவரை எமாற்ற நினைத்து சிறு சிறு அப்பங்களாகத் தந்தாள்.அந்தரே ,''ஏன் சிறு அப்பங்களாகத் தருகிறாய்?''என வினவ கிழவியும் ,''நீ சிறிய பையன்.சிறு அப்பத்தைத் தூக்கிச் செல்வது எளிதாக இருக்கும்.''என்றாள்'பணம் கொடுக்கும்போது அந்தரே ஒரு ரூபாய்க்குப் பதிலாக ஐம்பது காசுகள் மட்டும் கொடுத்தவுடன் கிழவி,''காசு குறைவாக இருக்கிறதே?''என்று கேட்டாள்.அதற்கு அந்தரே,''வயதான உனக்கு காசை எண்ணிப் பார்க்க சுலபமாக இருக்கும் என்றுதான் குறைவாகக் கொடுத்தேன்.''என்றார்.
|
|
புத்திசாலிப் பையன்! அருமையான பகிர்வு!