உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எந்தக் கணவன்?

0

Posted on : Tuesday, January 10, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பெண் தன் கணவன் மீது உயிரையே வைத்திருந்தாள்.திடீரென ஒரு நாள் அவன் இறந்து விட அவளால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவள் ஞானி ஜே.கே.அவர்களிடம் சென்று தன் கணவனுக்கு உயிர் மீண்டும் அளிக்க வேண்டினாள்.பிறந்த ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும்,அவர்களை உயிர்ப்பிக்க வழி ஏதும் இல்லை என்று அவர் அந்தப் பெண்ணிடம் தெளிவாகச் சொன்ன போதிலும் அவள் மீண்டும் தான் சொன்னதையே கூறிக் கொண்டிருந்தாள்.ஜே.கே.அவளிடம் கேட்டார்,''சரி,உனக்கு எந்தக் கணவனை உயிர்ப்பித்துத் தர வேண்டும்?''கணவன் இறந்த அதிர்ச்சியை விட இந்தக் கேள்வி அவளுக்கு அதிக அதிர்ச்சியைத் தந்தது.அவளுக்குக் கோபமும் வந்தது.ஜே.கே.அவளிடம் அமைதியாகச் சொன்னார்,''அம்மா,நான் கேட்டதை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.உன்னைத் திருமணம் செய்து கொள்ளுமுன் இருந்தானே அவனையா,திருமணம் செய்து கொண்டபின் இருந்தானே அவனையா,இளைஞனாக இருந்தானே அவனையா,முதியவன் ஆனானே அவனையா,ஆரோக்கியத்துடன் இருந்தானே அவனையா,நோய் வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தானே,அவனையா,யாரை உயிர் பிழைக்க வைக்க வேண்டும்?சொல்,''அந்தப் பெண்ணுக்கு ஏதோ புரிவது போலத் தெரிந்தது.ஜே.கே.மீண்டும் சொன்னார்,''இளைஞனாய் இருந்த அவன் எப்படி முதியவன் ஆனானோ,உடல் நலத்துடன் இருந்தவன்,எப்படி நோய் வாய்ப்பட்டானோ,அதுபோல இறந்ததும் ஒரு இயற்கையான செயல்.எனவே நீ கவலையை மறந்து வீட்டிற்குச் செல்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment