மெஸ்ஸையா என்ற இசைக் குழுவினர்,தங்கள் நிகழ்ச்சியை முதல் முதலாக லண்டனில் நடத்தியபோது,அரசரும் அதைக் கேட்க வந்திருந்தார்.அந்த இசைக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அல்லேலூயா பாடிக்கொண்டிருந்தபோது,அரசர் மனம் நெகிழ்ந்து, உணர்ச்சி வசப்பட்டு மரபுகளை மறந்து,அந்த இசைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எழுந்து நின்றார்.அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லா பிரபுக்களும் அரசரைப் பின்பற்றி எழுந்து நின்றனர்.இசையை ரசித்துக் கொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் எழுந்து நின்றனர்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து அல்லேலூயா பாடப்படும்போது எழுந்து நிற்பது என்ற வழக்கம் ஏற்பட்டது.
|
|
Post a Comment