உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனிதனும் சிங்கமும்

0

Posted on : Sunday, August 08, 2010 | By : ஜெயராஜன் | In :

தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி ஒரு மனிதனுக்கும் ஒரு சிங்கத்திற்கும் ஒரு நாள் தர்க்கம் ஏற்பட்டது.ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல பக்கத்தில் ஒரு சிலை இருந்தது.''அதைப் பார்த்தாயா?யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.''என்றான் மனிதன்.
''ஓ,அது மனிதன் செய்த சிலை.ஒரு சிங்கம் சிலை செய்யுமானால்,மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது,தான் நிற்பது போலச் செய்திருக்கும்.''என்று சொல்லியது சிங்கம்.
 தனக்கென்றால் தனி வழக்குதான்.
                                                          --ஈசாப் நீதிக் கதை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment